/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/New Project (1)_11.jpg)
இந்தியாவில மூன்றாவது கரோனாஅலை தொடங்கியுள்ளது. ஒமிக்ரான்பரவலால் இந்த மூன்றாவது அலை ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்றைவிட இன்று, நாட்டில் தினசரி கரோனாபாதிப்பு கிட்டத்தட்ட 5 சதவீதம் குறைந்துள்ளது.
நேற்றைய தினம் 2 லட்சத்து 71 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனாஉறுதி செய்யப்பட்ட நிலையில், 2 லட்சத்து 58 ஆயிரத்து 89 பேருக்கு மட்டுமே கரோனா உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனா பாதிக்கப்பட்ட 385 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேநேரத்தில்கரோனாபாதிப்பிலிருந்து 1 லட்சத்து 51 ஆயிரத்து 740 பேர் மீண்டுள்ளனர். இதற்கிடையே நாட்டில் ஒமிக்ரான்பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,209 ஆக அதிகரித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)