இந்தியாவில் கரோனாபாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனாபாதிப்பு கண்டறிப்பயப்பட்டுவருகிறது. இந்தநிலையில்கடந்த 24 மணிநேரத்தில்இந்தியாவில் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 723 பேருக்கு கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில்கரோனாவால்பாதிக்கப்பட்ட 146 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே இந்தியாவில் ஒமிக்ரான்பாதிப்பு உறுதியானவர்களின்எண்ணிக்கை 4 ஆயிரத்தைக்கடந்துள்ளது. 4,033 பேருக்கு இதுவரைஒமிக்ரான்பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமாக மஹாராஷ்ட்ராவில்1, 216 பேருக்கும், ராஜஸ்தானில் 528 பேருக்கும், டெல்லியில் 513 பேருக்கும்ஒமிக்ரான்பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் நாட்டில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட4,033 பேரில் 1552 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.