ADVERTISEMENT

800-ஐ நெருங்கிய ஒமிக்ரான் பாதிப்பு - இந்தியாவில் மீண்டும் உயர்ந்த தினசரி கரோனா பாதிப்பு!

09:46 AM Dec 29, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகை தற்போது அச்சத்தில் ஆழ்த்தியுள்ள ஒமிக்ரான் கரோனாவின் பாதிப்பு, இந்தியாவிலும் வேகமாக அதிகரித்துவருகிறது. தற்போது நாட்டில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 800-ஐ நெருங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது 781 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக டெல்லியில் 238 பேருக்கு ஒமிக்ரான் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்கடுத்ததாக மஹாராஷ்ட்ராவில் 167 பேருக்கும், குஜராத்தில் 73 பேருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கரோனா பாதிக்கப்பட்ட 781 பேரில் 241 பேர் குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பும் எகிறியுள்ளது.

இந்தியாவில் நேற்று முன்தினம் 6,358 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியான நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 9,195 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT