தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நான்கு இடங்களில் தபால் துறை தேர்வு தொடங்கியது. அஞ்சல் துறையில் 1039 காலி பணியிடங்களுக்கான நடைபெறும் தேர்வில் வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே இடம் பெறும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அஞ்சல் துறையில் தபால்காரர், அஞ்சலக உதவியாளர், அஞ்சல் அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் தேர்வெழுதி வருகின்றன. இருப்பினும் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என மதுரை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.