காஷ்மீரில் துணை ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் அஜய் பிசாரியா, டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சர், உள்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்துவதற்காக இந்திய தூதருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நிலைப்பாடு உறுதி செய்யப்பட்டு பின்னர் இந்திய தூதர் அஜய் பிசாரியா பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்படவிருக்கிறார்.