Skip to main content

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு.....எதிர்கட்சிகள் அதிர்ச்சி!

Published on 20/05/2019 | Edited on 20/05/2019

இந்தியா முழுவதும் 17-வது மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைப்பெற்றது. இதற்கான கடைசி கட்ட மக்களவை தேர்தல் நேற்று (19/05/2019) நடந்து முடிந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியானது. இதில் நியூஸ் 18 தொலைக்காட்சி, இந்தியா டுடே, டைம்ஸ் நவ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்புகளைப் பார்க்கலாம். மக்களவையில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் மக்களவை தொகுதியை தவிர்த்து 542 தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்பு முடிவுகள்.

"டைம்ஸ் நவ்" கருத்துக்கணிப்பு (Times Now Exit Poll) 
பாஜக கூட்டணி - 306 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி - 132 இடங்களையும், மற்ற கட்சிகள் - 104 இடங்களை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி - 29 இடங்களையும , அதிமுக-பாஜக கூட்டணி- 9 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.

 

exit poll

 

 

"இந்தியா டுடே" கருத்துக்கணிப்பு (India Today Exit Poll)
பாஜக கூட்டணி - 271-298.
காங்கிரஸ் கூட்டணி - 73-104.
மற்ற கட்சிகள் - 58-80.
மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி - 34-38 இடங்களை கைப்பற்றும் எனவும், அதிமுக - பாஜக கூட்டணி - 0-4 இடங்களை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.

நியூஸ் 18 தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு (News 18 Network Exit Poll)
பாஜக கூட்டணி - 336 .
காங்கிரஸ் கூட்டணி -124.
மற்ற கட்சிகள் -82.
தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி - 22 முதல் 24 இடங்களையும், அதிமுக - பாஜக கூட்டணி - 14-16 இடங்களை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.

 

rahul

 

 

இந்த மூன்று செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பிலும் பாஜக கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளதால், மாநில மற்றும் எதிர்கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதே போல் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்து இருப்பதும் கருத்துக்கணிப்பில் வெளியாகியுள்ளது. இருப்பினும் இந்தியாவின் அடுத்தப் பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக கூட்டணி : 60-62 தொகுதிகளையும், சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி : 17-19 தொகுதிகளை கைப்பற்றும் எனவும், காங்கிரஸ் கூட்டணி : 1-2 தொகுதிகளை கைப்பற்றும் என நியூஸ் 18 தொலைக்காட்சிகளில் வெளியானது. இதனால் காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகள் ஆட்சி அமைப்பதோ, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மேற்கொண்டு வரும் மூன்றாவது அணி சுற்றுப்பயணத்தில் சற்று பின்னடைவாக இந்த கருத்துக்கணிப்புகள் அமைந்துள்ளன. அதே போல் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது போல் மே-23 ஆம் தேதி தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தான் முடிவு எடுக்கப்படும் என அறிவிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கருத்துக்கணிப்புகளுக்கு எதிராக பல்வேறு கட்சித்தலைவர்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் இதுதான் நடக்கும்” - காங்கிரஸ் முதல்வர் எச்சரிக்கை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Telangana Chief Minister warns This is what will happen if BJP comes to power

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது.

அதே வேளையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. அதில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, நேற்று (25-04-24) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, “மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறும் வகையில் 400 இடங்களைக் கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது. இது ரிசர்வேஷன் முறையை ரத்து செய்யும் மசோதாவை நிறைவேற்ற உதவும். பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரிசர்வேஷனை தான் ஒழிக்கும். ஆர்.எஸ்.எஸ் அதன் தலைவர்கள் பலமுறை குறிப்பிட்டது போல், 2025க்குள் இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. அனைத்து இட ஒதுக்கீடுகளையும் ரத்து செய்வது பாஜகவின் சதி. காங்கிரஸின் எண்ணம், மக்கள்தொகை அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டைத் தொடருவதும், அதிகரிப்பதுமாகும்.

இது குறித்து பட்டியலின, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். பாஜகவுக்கு வாக்களிப்பது என்பது உங்கள் சொந்த நலன்களுக்கு எதிராக வாக்களிக்கிறீர்கள் என்று அர்த்தம். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இட ஒதுக்கீட்டைத் தொடர்வது மட்டுமின்றி, ஓ.பி.சி.யினரின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பைக் கேட்டு, அவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் உரிய பங்கைப் பெற வேண்டும் என்று கூறியிருக்கிறார்” எனக் கூறினார். 

Next Story

“இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை பா.ஜ.க ரத்து செய்யும்” - மத்திய அமைச்சர் அமித்ஷா

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Union Minister Amit Shah says BJP will cancel reservation for Muslims

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

இதனையடுத்து, மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. 

அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெலுங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது பேசிய அவர், “மஜ்லிஸுக்கு பயந்து காங்கிரசும், டி.ஆர்.எஸ் கட்சியும் தெலுங்கானா விடுதலை தினத்தைக் கொண்டாடுவதில்லை. மஜ்லிஸுக்கு பயப்படாததால் தெலுங்கானா விடுதலை தினத்தை கொண்டாடுவோம் எனப் பா.ஜ.க முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் மற்றும் டி.ஆர்.எஸ் இஸ்லாமியர்களுக்கு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து செய்து பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு பாஜக வழங்கும்.

காங்கிரஸும், டி.ஆர்.எஸ்.ஸும் ராமர் கோயில் கட்டுவதை ஒருபோதும் விரும்பவில்லை. 370வது சட்டப்பிரிவை ரத்து செய்துவிட்டு, காஷ்மீரை என்றென்றும் இந்தியாவுடன் ஒருங்கிணைத்தார் நரேந்திர மோடி. மத்திய பாஜக தலைமையிலான அரசு, 10 ஆண்டுகளில், நீண்ட காலமாக நாட்டில் நிலவி வந்த பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளது. சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதன் மூலம், காஷ்மீரை நாட்டோடு என்றென்றும் ஒருங்கிணைத்துவிட்டார் மோடி. ரகுநந்தன் ராவுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் மோடியை மீண்டும் பிரதமராக்க உதவும்” என்று கூறினார்.