Skip to main content

"சிறுபிள்ளைதனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்.." - சீனா அத்துமீறலை சாடிய வெளியுறவுத்துறை அமைச்சகம்!

Published on 07/01/2022 | Edited on 07/01/2022

 

ministry of external affairs

 

இந்திய வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், சீனாவின் அத்துமீறல்கள் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமளித்துள்ளார். கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவிற்கு சொந்தமான பகுதியில் சீன வீரர்கள் கொடியேற்றியதாக வெளியான தகவல்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்ச்சி, அந்த செய்திகளில் உண்மை இல்லை என கூறியதுடன், சீன வீரர்கள் இந்திய பகுதியில் கொடியேற்றியாக வெளியான கூற்றுக்கு முரண்படும் வகையிலான புகைப்படங்களை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அதேபோல் லடாக்கின் பாங்காங் ஏரியில் சீனா பாலம் கட்டி வருவதாக வெளியான தகவலையும் அரிந்தம் பாக்ச்சி உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக அவர், "சீனா, பாங்காங் ஏரியில் பாலம் கட்டுவதை இந்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. சுமார் 60 ஆண்டுகளாக சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் இருந்து வரும் பகுதிகளில் இந்தப் பாலம் கட்டப்பட்டு வருகிறது. நமது பாதுகாப்பு நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது' என கூறியுள்ளார்.

 

அண்மையில் நாடு கடந்த திபெத் பாராளுமன்றம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில், திபெத்துக்கான அனைத்துக் கட்சி இந்திய நாடாளுமன்ற அமைப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீன தூதரகம், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியது. சீன தூதரகம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியது சர்ச்சையான நிலையில், சீன தூதரகம் கடிதம் எழுதியதை இந்திய வெளியுறவுத்துறை கண்டித்துள்ளது. "சீன தூதரகம் எழுதிய கடிதத்தின் பொருள், அதன் தொனி மற்றும் எழுதப்பட்ட காலம் ஆகியவை பொருத்தமற்றவை. இந்தியா ஒரு துடிப்பான ஜனநாயகம் என்பதை சீனத் தரப்பு கவனிக்க வேண்டும். இந்திய எம்.பி.க்கள் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் நம்பிக்கைகளின்படி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். சீனத் தரப்பு இந்திய எம்.பி.க்களின் இயல்பான செயல்பாடுகளை மிகைப்படுத்தி, இருதரப்பு உறவுகளை மேலும் சிக்கலாக்குவதை தவிர்க்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என அரிந்தம் பாக்ச்சி கூறியுள்ளார்.

 

மேலும் அருணாச்சல பிரதேசத்தின் பகுதிகளுக்கு சீனா பெயர் சூட்டியது குறித்து பதிலளித்த அரிந்தம் பாக்ச்சி, "கடந்த வாரம் அருணாச்சல பிரதேசத்தில் சில இடங்களுக்கு சீன தரப்பு பெயர் சூட்டியதாக வெளியான செய்திகளை பார்த்தோம். ஏற்றுக்கொள்ள முடியாத பிராந்திய உரிமைகோரலை ஆதரிக்கும் இதுபோன்ற அபத்தமான நடவடிக்கைகளை எங்களது கருத்துக்களையும் தெரிவித்தோம். இத்தகைய சிறுபிள்ளைத்தனமான செயல்களில் ஈடுபடுவதற்குப் பதிலாக, இந்தியா-சீனா எல்லையில் மெய்யான எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் மேற்குப் பகுதியில் நிலவும் உராய்வுகளை தீர்க்க சீனா எங்களுடன் இணைந்து ஆக்கப்பூர்வமாக செயல்படும் என்று நாங்கள் நம்புகிறோம்" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் தாக்குதல்; 5 சீனர்கள் பலியான சோகம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
pakistan Shangla Besham city incident 

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் சீன நிறுவனங்கள் துறைமுகம், விமான நிலையம்,  சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சீனாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஷாங்லா என்ற மாவட்டத்திற்கு உட்பட்ட தசு என்ற இடத்தில் இன்று (26.03.2024) தற்கொலைப் படை தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சீனாவைச் சேர்ந்த பொறியாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்வத்தை பாகிஸ்தான் அரசும் தற்கொலைப் படை தாக்குதல் தான் என உறுதி செய்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாகிஸ்தான் காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதே சமயம் இந்த தாக்குதல் சம்வத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மலகாண்டின் போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி.) கூறுகையில், “ஷாங்லாவின் பெஷாம் நகரில் சீனர்களின் வாகனம் தாக்கப்பட்டதில் ஐந்து சீன நாட்டவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். சீன நாட்டவர்கள் இஸ்லாமாபாத்தில் இருந்து தாசு முகாமுக்குச் செல்லும் பொறியியலாளர்கள் ஆவர்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

தொடங்கியது '2024 தேர்தல் திருவிழா'- தேதிகள் அறிவிப்பு

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
'2024 Election Festival' begins- dates announced

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர் சந்து ஆகியோர் நேற்று முன்தினம் பதவி ஏற்று கொண்டனர். அதே நேரம் நாடு முழுவதும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது. தயார் நிலையில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் உள்ளன. தொடர்ந்து தேர்தல் தேதி பற்றி முடிவெடுப்பதற்கான தேர்தல் ஆணையர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இன்று (16/03/2024) பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

அதன்படி இதற்கான செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உரையாற்றுகையில், ''மக்களவைத் தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் முழுமையாக தயாராகி உள்ளது. 2024-ல் மட்டும் 60 நாடுகளில் தேர்தல் நடைபெறுகிறது. ஒட்டுமொத்த உலகிற்கே இது தேர்தல் ஆண்டு. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் உள்ளது. இந்த தேர்தலில் மொத்தமாக 986.88 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். 2019 ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை விட 6 சதவிகிதத்திற்கு அதிகமான வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

சுமார் 20 கோடி இளம் வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். 1.50 கோடி பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 55 லட்சம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. நூறு வயதை கடந்த 2.18 லட்சம் பேர் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். ஆள்பலம், பணபலம், வதந்தி, நடத்தை விதிமீறல் ஆகிய நான்கும் தேர்தல் ஆணையத்திற்கு சவாலாக உள்ளது. நான்கு பலத்தை கட்டுப்படுத்தி அமைதியான முறையில் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆள்பலத்தை பயன்படுத்தி முறைகேடு செய்வதை தடுக்க தேவையான அளவு பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்படுவர். 50% வாக்கு சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு இணைய வழியில் நேரலை செய்யப்படும். எல்லைகளில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். தேசிய, மாநில, மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்படும். சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சியினர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.பொய்ச் செய்திகளை உருவாக்கி வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது'' என்றார்.

அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், 7 கட்டங்களாக 2024 மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டத்திலேயே தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.  'மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல், மார்ச் 27 வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள்,  மார்ச் 28 வேட்புமனு மறுபரிசீலனை, மார்ச் 30 வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள், தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி (செவ்வாய் கிழமை) வாக்கு எண்ணிக்கை என விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விளவங்கோட்டுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.