Skip to main content

இணையதள வசதிகள் இருந்தால் போதும்...அரசு உயர் அதிகாரிகளை மக்கள் எளிதாக சந்திக்கலாம்!

Published on 03/06/2019 | Edited on 03/06/2019

மத்திய அரசின் மின்ணணு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகம் மத்திய மற்றும் மாநில அரசுக்களின் உயர் அதிகாரிகளை மக்கள் எளிதாக சந்திக்கும் வகையில் ஒரு புதிய இணைய தளத்தை  உருவாக்கியுள்ளது. இந்த இணைய தளத்தின் பெயர் "My Visitors" (or) "e-visitors" ஆகும். இணைய தள முகவரி: https://evisitors.nic.in/public/Home.aspx (அல்லது) https://evisitors.nic.in/public/MyVisitRegistration.aspx . மத்திய மற்றும் மாநில அரசுகளின் துறை சார்ந்த உயர் அதிகாரிகளை சந்திக்க விரும்புவோர்கள், மேலே குறிப்பிட்டுள்ள இணையதளத்திற்கு சென்று "Visitors Details" என்ற "Options" இடம் பெற்றிருக்கும். அதில் அதிகாரிகளை சந்திக்க கூடிய நபரின் பெயர், நிரந்தர முகவரி, தொலைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, ஏதேனும் ஒரு அடையாள அட்டை எண் (அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டை பான் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை) உள்ளிட்டவை பூர்த்திச்செய்ய வேண்டும்.

 

 

my visitors

 

 

பின்பு "To Meet" என்ற "Options" இடம் பெற்றிருக்கும். அதில் மத்திய அரசு , மாநில அரசு இரு அரசுகளின் எந்த அரசு அதிகாரிகளை சந்திக்க வேண்டுமோ, அந்த மாநில அரசின் பெயரை தேர்ந்தெடுக்கவும். அதன் பிறகு எந்த துறையை சார்ந்த அதிகாரிகளை சந்திக்க வேண்டுமோ, அந்த துறையின் பெயர் , அதிகாரிகளின் பெயர் உள்ளிட்டவை தேர்ந்தெடுத்து, எந்த தேதியில் அதிகாரிகளை சந்திக்கிறீர்கள் மற்றும் நேரம் உள்ளிட்டவை குறிப்பிட்டு, எத்தனை நபர்களுடன் சென்று அதிகாரிகளை சந்திக்க உள்ளீர்கள் என்பது தொடர்பான எண்ணிக்கையை குறிப்பிட்டு, எதற்காக அதிகாரிகளை சந்திக்கிறீர்கள் என்பது தொடர்பான முழு விவரத்தை கட்டாயம் குறிப்பிட்டு "Submit" செய்தால் பதிவு எண்களானது, தொலைப்பேசி எண், ஈ-மெயில் முகவரிக்கு வரும். அதனைத் தொடர்ந்து தனது விண்ணப்பத்தின் நிலையை இணையதள முகவரி: https://evisitors.nic.in/public/MyVisitStatus.aspx சென்று பதிவு எண் குறிப்பிட்டால் விண்ணப்பத்தின் நிலையை எளிதாக அறியலாம். அதே போல் சமந்தப்பட்ட அதிகாரி விண்ணப்பத்தை பார்த்து விட்டு, ஒப்புதல் அளித்தால் சமந்தப்பட்ட நபருக்கு துறையின் அதிகாரி குறுந்தகவல் மூலமாகவோ அல்லது ஈ-மெயில் மூலமாகவோ "Visitors Pass" யை வழங்குவார்.

 

 

evisitors

 

 

அதன் பின் விண்ணப்பித்த நபர் "visitors pass" - யை பதிவிறக்கம் செய்து  எடுத்துக் கொண்டு அரசு அதிகாரிகளை எளிதில் சந்தித்து தனது கிராமம் அல்லது மாவட்ட மக்களின் குறைகளை அதிகாரியிடம் தெரிவித்து, நிரந்தர தீர்வை காணலாம். மத்திய மற்றும் மாநில அரசுகளின் அதிகாரிகளை தனி நபரோ அல்லது குழுவினரோ சந்திக்கலாம். இந்த இணைய தளத்தை மத்திய அரசின் நிறுவனமான " National Informatics Centre" நிறுவனம் உருவாக்கி உள்ளது. மக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்கவே மத்திய அரசு இத்தகைய நடைமுறையை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளை எளிதாக மத்திய அரசின் அதிகாரிகளிடம் எடுத்து சென்று பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வை காண முடியும் என்றால் எவராலும் மறுக்க முடியாது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லி மேயர் தேர்தல் ரத்து; பா.ஜ.க.வுக்கு எதிராக ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Aam Aadmi struggle for Canceled Delhi Mayoral Election

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், டெல்லி மேயர் மற்றும் துணை மேயரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (26-04-24) நடைபெற இருந்த நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி மாநிலத்தில் மொத்தம் 250 கவுன்சிலர்கள் உள்ளனர். டெல்லியில் உள்ள மேயரைத் தேர்ந்தெடுக்க 10 எம்.பி.க்கள், 14 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 250 கவுன்சிலர்கள் 274 வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். இதில் மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு அதிகபட்சமாக 138 வாக்குகள் தேவை. அந்த வகையில், ஆம் ஆத்மி கட்சிக்கு, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் உட்பட 151க்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைக்கப்பெற இருந்தது. இதனால், டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது.

இந்த நிலையில், டெல்லி மேயர் தேர்தலை ஆளுநர் அலுவலகம் ரத்து செய்யப்படவுள்ளதாக டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து தெரிவிக்கையில், ‘தலைமை அதிகாரி நியமிக்கப்படாததால் டெல்லி மேயர் தேர்தல் தள்ளி வைக்கப்படுகிறது; எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்து மேயர் சபையில் போராட்டம் நடத்தி வருகின்றது.

இது குறித்து ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கூறுகையில், “ பட்டியலின சமூகத்தைத் தடுக்க இவர்கள் சதி செய்கிறார்கள். இந்த முறை, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்தான் டெல்லி எம்சிடியின் மேயராக வர இருந்தது. ஆனால் தேர்தலை ரத்து செய்ததன் மூலம், அவர் தனது பட்டியலின விரோத மனநிலை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை சிதைத்ததற்கு மற்றொரு சான்றைக் கொடுத்துள்ளனர்” எனப் பேசினார். தற்போது மேயர் ஷெல்லி ஓபராயின் பதவிக்காலம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் புதிய மேயர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் பதவியில் நீடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. 

Next Story

“இதை செய்ய சொன்னால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்” - வாட்ஸ் அப் எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 WhatsApp warning May have to leave India

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் உபயோகிக்கும் செயலி தான் வாட்ஸ் அப். இந்த செயலி மூலம், தகவல்களை பரிமாறவும், இணைய சேவை மூலம் எந்தவித கட்டணமுமின்றி வீடியோ கால், ஆடியோ கால் போன்றவற்றை பயன்படுத்தவும் முடியும். மேலும், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் என அனைத்து விதமான பரிமாற்றங்களையும் இந்த செயலி மூலம் அனுப்பக்கூடிய வசதிகள் உண்டு. இந்த செயலியை உபயோகிக்காத மக்கள் மிகவும் சொற்பமாக தான் இருக்க முடியும் என்றுதான் கூற வேண்டும். 

இதற்கிடையில் வாட்ஸ் அப் பயனர்களின் வசதிகளுக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த செயலி மூலம் பயனர் ஒருவருக்கு அனுப்பும் செய்திகளை மூன்றாம் நபர்கள் பார்க்க முடியாதவாறு எண்டு டு எண்டு என்கிரிப்ஷன் ( End to End Encryption) முறையை கொண்டு வந்தது. இதனைப் பயன்படுத்தி பயனர்கள், தாங்கள் அனுப்பும் செய்திகளை பாதுகாத்து கொள்ளலாம். இதனால், தனிப்பட்ட ஒருவரின் செய்திகள் பாதுகாக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் மத்திய அரசு புதிய மாற்றத்தை கொண்டு வந்தது. மத்திய அரசு கொண்டு வந்த அந்த சட்டத்தில் கூறியதாவது, போலி செய்திகளையும், நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் தவறான செய்தி பகிர்வுகளை கண்டறிய வேண்டும். இதனால், வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற செய்தி பகிர்வு செயலி வாயிலாக பகிரப்படும் அனைத்து செய்திகளும் சேமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

இதனை எதிர்த்து வாட்ஸ் அப், பேஸ் புக் ஆகிய நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு நேற்று (25-04-24) டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ‘வாட்ஸ் அப் எண்டு டு எண்ட் என்கிரிப்ஷன் காரணமாக போலி செய்திகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், இது போலி செய்திகளால் நாட்டில் நிலவும் அமைதி மற்றும் ஒற்றுமையை சீர்குலைத்துவிடும்’ என வாதிட்டார். 

இதனையடுத்து, வாட்ஸ் அப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேஜஸ் காரியா, “இந்த சட்டத்தை அமல்படுத்துவதால் நாங்கள் ஒரு முழுமையான சங்கிலியை வைத்திருக்க வேண்டும். மேலும், மில்லியன் கணக்கான செய்திகளை பல ஆண்டுகளாக சேமிக்க வேண்டும் நிலை உருவாகும். உலகில் எந்த நாட்டிலும் இது போன்ற சட்டங்கள் இல்லை.  இது போன்ற சட்டங்களை கொண்டு வந்து  என்கிரிப்ஷனை எடுக்க சொன்னால் வாட்ஸ்அப் இந்தியாவை விட்டு செல்ல வேண்டி இருக்கும்” எனத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பான வழக்கை ஒத்திவைத்தனர்.