Skip to main content

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உருக்கம்!

Published on 31/05/2019 | Edited on 31/05/2019

2014- ஆம் ஆண்டு ஆட்சி அமைத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக  பாஜக கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் பதவி வகித்தார். இவர் பதவி வகித்த நாட்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைளை எடுத்தார். அதில் ஒரு பகுதியாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்திற்கென்று பிரத்யேக கணக்குகளை சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டரில் தொடங்கினார். அந்த கணக்குகளை நிர்வகிக்க அதிகாரிகளையும் நியமனம் செய்தார். இதன் மூலம் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டாலோ அல்லது பணிபுரியும் இடத்தில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டாலோ உடனடியாக சமூக வலைதளப்பக்கங்கள் மூலம்  இந்திய வெளியுறவு துறைக்கு தகவல் அனுப்பினால் போதும் 24 நேரத்தில் தீர்வு காணும் வகையில் உடனடி நடவடிக்கையை சுஷ்மா சுவராஜ் நேரடியாகவும், தூதரக அதிகாரிகள் மூலமும் மேற்கொண்டார்.

 

 

susma suwaraj

 

 

இதனால் உலகத்தில் உள்ள அனைத்து இந்தியர்களும் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மாவை பாராட்டினர். ஏனெனில் எந்த நேரத்தில் புகார் வந்தாலும் அதை பகல் இரவு பாராமல் உரிய நபர்களுக்கு உடனடி தீர்வை பெற்று தந்துள்ளார் என்றால் எவராலும் மறுக்க முடியாது. மத்திய அமைச்சரவையில் மிக சிறப்பாக, மக்கள் எளிதில் சந்திக்க கூடிய வகையில் அமைச்சகத்தை செயல்பட  வைத்தவர். குறிப்பாக சொல்ல வேண்டுமானால், 2014-2019 ஆண்டுகளில் மக்களுக்காக 24*7 இயங்கிய அமைச்சகம், இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் ஆகும். அதே போல் சுஷ்மா சுவராஜுக்கு ஒத்துழைப்பு தரும் வகையில் வெளியுறவு துறை அதிகாரிகளும் சிறப்பாக பணியற்றினர். இந்நிலையில் நேற்று பதவி ஏற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் சுஷ்மா சுவராஜ் இடம் பெறவில்லை.

 

 

susma

 

 

இதற்கு காரணம் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால அமைச்சரவையில் இடம் பெற விருப்பமில்லை என பிரதமரிடம் தெரிவித்து, தனது அமைச்சகத்தின் செயலாளர் எஸ்.ஜெய்சங்கரை  பரிந்துரை செய்தார். அதனைத் தொடர்ந்து வெளியுறவு துறை அமைச்சராக ஜெய்சங்கர் நேற்று பதவி ஏற்றார் . இந்த நிலையில் சுஷ்மா சுவராஜ்  தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு உருக்கமாக நன்றி தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளார். அதில் பிரதமர், தமக்கு கடந்த 5 ஆண்டுகள் வெளியுறவுத்துறை அமைச்சராக பணிப்புரிய வாய்ப்பு  வழங்கி மக்களுக்கு சேவை புரியும் வாய்ப்பை அளித்தார். இதற்காக பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என உருக்கத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.