Skip to main content

இந்திய மீனவர்களைக் கடத்திச் சென்ற நைஜீரிய நாட்டு கடற்கொள்ளையர்கள்!

Published on 07/05/2019 | Edited on 07/05/2019

இந்திய மீனவர்கள் 5 பேரை நைஜீரிய நாட்டு கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர். அவர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. ஆப்ரிக்க நாடான நைஜீரிய கடல் எல்லையில் இந்திய மீனவர்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கடற்கொள்ளையர்கள் இந்திய மீனவர்களையும் , MT APECUS ( IMO 733810) அவர்களின் மீன்ப்பிடி கப்பலையும் பிடித்துச் சென்றனர். இது தொடர்பாக கடத்தப்பட்ட மீனவர் சுதீப் குமார் சவுத்ரி என்பவரின்  மனைவி பாக்யஸ்ரீ தாஸ் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் ட்விட்டர் வாயிலாக முறையிட்டார்.

 

SUSMA SWARAJ

 

இதனை ஏற்ற சுஷ்மா சுவராஜ் நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்புக் கொண்டு மீனவர்கள் கடத்தப்பட்டதை உறுதிச்செய்தார். இருப்பினும் தனது நேரடி பார்வையில் இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் நைஜீரிய நாட்டு அரசின் உதவியுடன் இந்திய மீனவர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்திய வெளியறவுத் துறை இது போன்ற பல மீனவர்களை கொள்ளையர்களிடம் இருந்து மீட்டுள்ளது . இதனால் இந்த மீனவர்களை இந்திய வெளியுறவு துறை விரைவில் மீட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்தியா

Published on 06/05/2023 | Edited on 06/05/2023

 

shanghai cooperation organisation external affairs ministers meet goa

 

கோவா மாநிலம் பெனாலியம் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்துகொள்ளும் 2 நாள் மாநாடு நேற்று முன்தினம் (04.05.2023) தொடங்கியது. இந்த அமைப்பில் உறுப்பு நாடுகளாக உள்ள நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும், பார்வையாளர்களாக உள்ள நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

 

இந்த மாநாட்டின் இரண்டாவது நாளான நேற்று (05.05.2023) பாகிஸ்தான் வெளியுறவுத்துறை பிலாவல் பூட்டோ பேசுகையில் தீவிரவாதத்தை ஒழிக்க அனைவரும் இணைந்து செயல்பட  அழைப்பு விடுத்தார். அப்போது மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசுகையில், "உலக நாடுகள் கொரோனா தொற்று பாதிப்புகளை எதிர்கொண்டிருந்த நிலையில் ஒரு நாட்டில் மட்டும் தீவிரவாத செயல்பாடுகள் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து நடைபெற்று கொண்டிருந்தது.

 

ஜம்மு காஷ்மீர் இப்போதும் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும். தீவிரவாதத்தை எந்த விதத்திலும் நியாயப்படுத்தக் கூடாது என்பதில் இந்தியா மிகவும் உறுதியாக உள்ளது. அனைத்து தீவிரவாத நடவடிக்கைகளும் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும். எந்த வழிகளில் எல்லாம் தீவிரவாத செயல்பாடுகளுக்கு நிதியுதவி கிடைக்கிறதோ அந்த வழிகளை எல்லாம் தடுத்து நிறுத்த வேண்டும். தீவிரவாத செயல்பாடுகளுக்கு நிதியுதவி அளிக்கும் பாகிஸ்தான் மீதான நம்பகத்தன்மை அந்நாட்டின் ரூபாய் மதிப்பை விட வேகமாக குறைந்து வருகிறது" என பேசினார். 

 

 

Next Story

இந்திய அமைச்சர் ஒருவரின் முதல் தென் அமெரிக்கப் பயணம்

Published on 20/08/2022 | Edited on 20/08/2022

 

 

First visit of an Indian Minister to South America...!

 

அமைச்சரான பிறகு முதல் முறையாக தென் அமெரிக்க நாடுகளுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். 

 

வருகிற ஆகஸ்ட் 22- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 27- ஆம் தேதி வரை பிரேசில், பராகுவே, அர்ஜெண்டினா ஆகிய தென் அமெரிக்க நாடுகளுக்கு பயணம் செய்ய உள்ள அவர், இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். 

 

மூன்று நாடுகளின் தலைவர்களைச் சந்திக்க உள்ள அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், இரு தரப்பு கூட்டுக் கூட்டங்களில் கலந்து கொள்ளவிருக்கிறார். தென் அமெரிக்க நாடுகளில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மேற்கொள்ளும் முதல் பயணமாக இது அமையவுள்ளது.