Skip to main content

ராணுவத்தில் பணிபுரியும் ஆண்களுக்கும் குழந்தை பராமரிப்பு விடுமுறை - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

Published on 11/08/2019 | Edited on 11/08/2019

மத்திய பணியாளர் நலத்துறை, பெண் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுவரும் குழந்தை பராமரிப்பு விடுமுறை இனி தனியாக வசிக்கும் ஆண் ஊழியர்களுக்கும் வழங்கப்படும் என விதிகளில் திருத்தம் செய்தது. இந்த விதிகள் ராணுவத்தில் பணிபுரியும் ஆண்களுக்கும் பொருந்தும் என ராணுவ அமைச்சகம் நேற்று தெரிவித்தது.


அதன்படி 40 சதவிகிதம் வரை மாற்றுத்திறனுடன், 22 வயது வரை உள்ள குழந்தைகளை பராமரிக்க பெண்களுக்கு 15 நாட்கள் வரை விடுப்பு வழங்கப்பட்டது. இனி, வயது வரம்பில்லாமல் 40 சதவிகிதம் வரை மாற்றுத்திறனுடன் கொண்ட குழந்தைகளை பராமரிக்க பெண் ஊழியர்களுக்கு மட்டுமின்றி தனியாக வசிக்கும் ஆண் ஊழியர்களுக்கும் 5 நாட்கள் விடுப்பு வழங்கப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

india defence minister army allowance minister rajnath singh signature delhi

 

 


இந்த உத்தரவு மனைவியை இழந்த அல்லது விவகாரத்து பெற்ற, குழந்தையை தனியாக வளர்க்கும், பாதுகாப்புத்துறையை சேர்ந்த அனைத்து ஆண் ஊழியர்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளார் . 





 

சார்ந்த செய்திகள்

Next Story

'புது முயற்சியை கையிலெடுத்த இஸ்ரேல் - ஷாக்கில் ஹமாஸ்

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

Israel launches new effort to 'freeze Hamas' online funding sources'

 

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பிற்கும் இடையே நடைபெற்று வரும் தாக்குதலானது கடந்த ஐந்து நாட்களாக நீடித்து வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஹமாஸ் அமைப்பின் நிதி ஆதாரங்களை, தாங்கள் முடக்கி உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

 

இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் இரு தரப்பிலும் சுமார் 2,100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் ராணுவம் தொடர்ச்சியாக காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் இருக்கும் கட்டிடங்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. இதனால் மேலும் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் ஹமாஸ் அமைப்பின் இணையவழி பண பரிமாற்றங்களை முடக்கியுள்ளதாகவும் இஸ்ரேல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

ஹமாஸின் கிரிப்டோகரன்சி தளத்தையும் முடக்கியுள்ளதாகவும், தங்களின் இந்த நடவடிக்கைகளால் ஹமாஸின் 90% நிதி ஆதாரங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் விளக்கம் கொடுத்துள்ளது. ஹமாஸ் அமைப்பைப் பொறுத்தவரை 2021 ஆம் ஆண்டுக்கான அவர்களின் நிதி நிலவரப்படி இந்திய மதிப்பில் 582 கோடி அளவிற்கான பணப்பரிவர்த்தனை இருந்தது. அதனால்தான் ஹமாஸ் அமைப்பு ஆயுதங்கள் வாங்கும் அளவுக்கு பலம் வாய்ந்த ஒன்றாக இருந்தது. இந்நிலையில் ஹமாஸ் அமைப்பின் பணப்பரிவர்த்தனையை முடக்கி பலவீனமாக்க, இந்த புது முயற்சியை இஸ்ரேல் எடுத்துள்ளது.

 

 

Next Story

அல் அக்சா மசூதி மீது தாக்குதல்; குண்டு மழையில் காசா; அமெரிக்கா பேச்சுவார்த்தை

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

Attack on Al Aqsa Mosque; Gaza under bombardment; American negotiations

 

இஸ்ரேல் போரில் காசா போர்க்களமாக மாறிவரும் நிலையில் அங்கு சிக்கித் தவிக்கும் மக்களை பத்திரமாக வெளியேற்றுவது குறித்து அமெரிக்கா ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

 

இஸ்ரேல் மற்றும் எகிப்து அரசுடன் அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சுல்லிவன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் தற்பொழுது அங்கு சிக்கி இருக்கும் மக்கள் மற்றும் மருத்துவ உதவி தேவைப்படும் மக்களை முதல் கட்டமாக எகிப்து எல்லைகளுக்கோ அல்லது தெற்கு இஸ்ரேல் அல்லது கப்பல்கள் மூலம் அண்டை நாடுகளுக்கோ கொண்டு செல்லலாமா என்ற ரீதியில் ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

 

6 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அல் அக்சா மசூதி மீது தாக்குதல் நடத்துவதற்கு இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த மசூதிக்கு முகமது நபி வந்துள்ளதாக நம்பிக்கை உள்ள நிலையில் கிழக்கு ஜெருசலேம் பகுதியில் உள்ள  அல் அக்சா மசூதி மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 

ஐ.நா மூலம் இரண்டு லட்சத்து 70 ஆயிரம் மக்கள் ஏற்கனவே காசா பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். காசா பகுதியில் மட்டும் 22 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். உலகிலேயே மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதிகளில் ஒன்றாக காசா இருந்து வருகிறது. காசா மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஐந்து நகரங்களில் தொடர்ச்சியாக 50க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய விமானங்கள் குண்டு மழை பொழிந்து வரும் நிலையில் பொதுமக்களையும் அப்பாவி மக்களையும் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என ஐ.நா உத்தரவிட்டிருந்தது. அதனையொட்டி அமெரிக்கா இந்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.