Advertisment

டெல்லி, உ.பியில் உச்சம் தொடும் கரோனா; இந்தியாவில் மீண்டும் ஒன்றரை லட்சத்தை கடந்த தினசரி எண்ணிக்கை

covid

Advertisment

இந்தியாவில் கரோனாஇரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் தினசரி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்துதடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதேநேரத்தில்நாளை (14.04.2021) மாநில/ யூனியன் பிரதேச ஆளுநர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தவுள்ளார் என மத்திய அரசின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தநிலையில்,தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்தியாவில்தினசரி கரோனாபாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 736 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. மேலும் கரோனாதொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 879 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியா, கரோனாவால்அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாமிடத்திலும், அதிக அளவிலானசிகிச்சை பெரும் கரோனா பாதிக்கப்பட்டோர் உள்ள நாடுகளின் பட்டியலில் மூன்றாமிடத்திலும் உள்ளது.

மஹாராஷ்ட்ராமாநிலத்தில் நேற்று ஒரேநாளில்51 ஆயிரம் பேருக்கு கரோனாஉறுதியானது. உத்தரப்பிரதேசத்தில் 13,685 பேருக்கும், டெல்லியில் 11,491 பேருக்கும் நேற்று ஒரேநாளில்கரோனாஉறுதி செய்யப்பட்டது. டெல்லியில் நான்காவது அலை ஏற்பட்டிருப்பதாக டெல்லி முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

corona virus Delhi India
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe