Skip to main content

முதன் முறையாக கடைக்கு சென்று ஷேவிங் செய்துள்ளேன் 'சச்சின்' நெகிழ்ச்சி!

Published on 04/05/2019 | Edited on 04/05/2019

உத்தரப்பிரதேஷ மாநிலத்தில் இரு பெண்கள் நடத்தும் சலூன் கடையில் இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் சென்று ஷேவிங் செய்து கொண்டுள்ளார்  . அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த நேகா மற்றும் ஜோதி இவர்களது தந்தை சலூன் கடை நடத்தி வந்தார் .இந்நிலையில் கடந்த  2014 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் அவர்  பாதிக்கப்பட , அதனைத் தொடர்ந்து தந்தையின் சலூன் கடையை நேகாவும்  மற்றும் ஜோதியும்  தொடர்ந்து நடத்தி வந்தனர் .

 

 

SACHIN BARBER SHOP

 

ஆண்களின் ஆதிக்கம் அதிகம் உள்ள துறையில் இந்த இளம் பெண்கள் தொடர்ந்து தொழில் செய்து தங்களது தந்தைக்கான மருத்துவச்செலவை பார்த்துக்கொண்டதுடன் , தங்களது படிப்பையும் தொடர்கின்றனர் .இந்நிலையில் இந்த இரு பெண்களின் கல்வி உதவிக்காக இந்திய கிரிக்கெட் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு ஷேவிங்  செய்யும் வாய்ப்பை "GILETTE INDIA" நிறுவனம் ஏற்பாடு செய்தது .இதனை புகைப்படத்துடன் சச்சின் தனது சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளார் . அதில்  இது எனக்கு முதல் முறை . நீங்கள் இதனை அறிந்திருக்காமல் இருக்கலாம் .நான் பிறரிடம் ஷேவிங் செய்துக்கொண்டதே இல்லை .அந்த சாதனை தற்போது உடைந்துள்ளது .இந்த பெண்களை சந்தித்ததை பெருமையாக நினைக்கிறேன் என்று சச்சின் கூறினார் .

சார்ந்த செய்திகள்

Next Story

இயக்குநராக அவதாரமெடுக்கும் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
All-rounder Yuvraj Singh will be incarnated as a director!

இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு வீரர் யுவ்ராஜ் சிங். களத்தில் தவிர்க்க முடியாத ஒரு ஆல் ரவுண்டராகவும், மிகச்சிறந்த பீல்டராகவும் மட்டுமல்லாமல், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அந்த பாதிப்புடனேயே 2011 உலகக்கோப்பை விளையாடி, தொடர்நாயகன் விருதையும் பெற்று இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஒரு கிரிக்கெட் வீரராக சாதனை படைத்த வகையிலும், ஒரு நோயாளியாக கேன்சரை எதிர்த்து வென்று மீண்டும் கிரிக்கெட்டில் களம் கண்ட ஒரு வீரர் என்கிற வகையிலும் சமூகத்திற்கு ஒரு உதாரணமான மனிதர் என்றால் அது மிகையாகாது.

அப்படிப்பட்ட யுவ்ராஜ் சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். கிரிக்கெட் பற்றியும் அவ்வப்போது சினிமா பற்றியும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில்  அவர் பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ,“என் படத்தில் நான். நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்து நானே என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கவுள்ளேன். என்னை வாழ்த்துங்கள் நண்பர்களே! இன்னும் ஓரிரு வருடங்களில் என்னை பெரிய திரையில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் பல அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இது உண்மையா? இந்த பதிவுடன் சேர்த்து ஒரு கிண்டலான ஸ்மைலியையும் பதிவிட்டிருப்பதால் இது ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்துக்கான பதிவாகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story

கிரிக்கெட் கதைக்களத்தை கையிலெடுத்த ஜேசன் சஞ்சய்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
jason sanjay movie update

விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இவரது மகனான ஜேசன் சஞ்சய், கனடா பல்கலைக்கழகத்தில் சினிமா துறை சம்பந்தமாகப் படித்து வந்தார். இவர் குறும்படம் இயக்கும் புகைப்படங்கள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இயக்கம் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.  இப்படத்தை லைகா தயாரிக்கிறது. இப்படத்தில் கவின், துல்கர் சல்மான் உள்ளிட்ட சில நடிகர்களின் பெயர் அடிப்பட்டது. ஆனால் அறிவிப்புக்கு பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. 

பின்பு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக கிரிக்கெட்டை மையப்படுத்தி லால் சலாம், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

மேலும் டெஸ்ட் என்ற தலைப்பில் சசிகாந்த் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது.