உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

Advertisment

இந்தியாவில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

Advertisment

india coronavirus update union health and family welfare

தற்போது வரை இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 2,069 லிருந்து 2,301 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 335, தமிழ்நாடு 309, கேரளா 286, டெல்லி 219, ஆந்திர பிரதேசம் 132, ராஜஸ்தான் 133, கர்நாடகா 124, உத்தரப்பிரதேசம் 113, தெலங்கானா 107, மத்தியப்பிரதேசம் 99 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 லிருந்து 56 ஆக உயர்ந்துள்ளது.கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை இந்தியாவில் 156 லிருந்து 157 ஆனது.இதனை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisment