ADVERTISEMENT
கரோனா வைரஸ் பரவலுக்குக் காரணமான சீனாவை நோய்த் தொற்று பாதிப்பில் முந்தியது இந்தியா. சீனாவில் 82,941 பேருக்கு கரோனா உள்ள நிலையில் இந்தியாவில் 85,940 பேருக்கு நோய்த் தொற்று இருக்கிறது. இந்தியாவில் கரோனா பாதித்த மாநிலங்களில் தமிழகம் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளது.
ADVERTISEMENT
இன்று (16/05/2020) காலை 08.00 மணி நிலவரப்படி இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,970- லிருந்து 85,940 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,649- லிருந்து 2,752 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27,920- லிருந்து 30,153 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 53,035 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல் தமிழகத்தில் 10,108, குஜராத்தில் 9,931, டெல்லியில் 8,895, ராஜஸ்தானில் 4,727, மத்திய பிரதேசத்தில் 4,595, உத்தரப்பிரதேசத்தில் 4,057, ஆந்திராவில் 2,307, தெலங்கானாவில் 1,454, கர்நாடகாவில் 1,056, கேரளாவில் 576, புதுச்சேரியில் 13 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,970 பேருக்கு கரோனா உறுதியான நிலையில், 103 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT