Advertisment

இந்தியாவில் 81,970 பேருக்கு கரோனா!

INDIA CORONAVIRUS UNION HEALTH MINISTRY

Advertisment

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் அமலில் உள்ள மூன்றாம் கட்ட ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இன்று (15/05/2020) காலை 08.00 மணி நிலவரப்படி இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,003- லிருந்து 81,970 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,549- லிருந்து 2,649 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,235- லிருந்து 27,920 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கரோனாவால் 51,401 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

INDIA CORONAVIRUS UNION HEALTH MINISTRY

Advertisment

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 27,524 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6,059 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 1,019 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் குஜராத்தில் 9,591, தமிழகத்தில் 9,674, டெல்லியில் 8,470, ராஜஸ்தானில் 4,534, மத்திய பிரதேசத்தில் 4,426, உத்தரப்பிரதேசத்தில் 3,902, ஆந்திராவில் 2,205, தெலங்கானாவில் 1,414, கர்நாடகாவில் 987, கேரளாவில் 560, புதுச்சேரியில் 13 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,967 பேருக்கு கரோனா உறுதியான நிலையில், 100 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

MINISTRY OF HEALTH AND FAMILY WELFARE India coronavirus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe