ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா பாதிப்பு 1,58,333 ஆக உயர்வு!

09:12 AM May 28, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, மே-31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT


இன்று (28/05/2020) காலை 08.00 மணி நிலவரப்படி இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,51,767- லிருந்து 1,58,333 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,337- லிருந்து 4,531 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 64,426- லிருந்து 67,692 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட 86,110 பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.


அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 56,948 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 17,918 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 1,897 பேர் உயிரிழந்துள்ளனர்.


அதேபோல் தமிழகத்தில் 18,545, குஜராத்தில் 15,195, டெல்லியில் 15,257, ராஜஸ்தானில் 7,703, மத்திய பிரதேசத்தில் 7,261, உத்தரப்பிரதேசத்தில் 6,991, ஆந்திராவில் 3,171, தெலங்கானாவில் 2,098, கர்நாடகாவில் 2,418, கேரளாவில் 1,004, புதுச்சேரியில் 46 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,566 பேருக்கு கரோனா கண்டறியப்பட்ட நிலையில், 194 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் தொடர்ந்து 7- ஆவது நாளாக கரோனா பாதிப்பு 6 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT