கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3- ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,933- லிருந்து 12,380 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 392- லிருந்து 414 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,344- லிருந்து 1,489 ஆக அதிகரித்துள்ளது.

Advertisment

india coronavirus strength increased peoples ministry of health

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 2,916 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 295 பேர் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், 187 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

அதேபோல் டெல்லியில் 1,578, தமிழகத்தில் 1,242, ராஜஸ்தானில் 1,023, மத்திய பிரதேசத்தில் 987, உத்தரப்பிரதேசத்தில் 735, தெலங்கானாவில் 647, கேரளாவில் 388, ஆந்திராவில் 525, குஜராத்தில் 766, கர்நாடகாவில் 279 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.