கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3- ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Advertisment

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,815- லிருந்து 11,439 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 353- லிருந்து 377 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,190- லிருந்து 1,306 ஆக அதிகரித்துள்ளது.

Advertisment

INDIA CORONAVIRUS STRENGTH 11,439 UNION HEALTH

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 2,687 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 178 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 259 பேர் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

அதேபோல் டெல்லியில் 1,561, தமிழகத்தில் 1,204, ராஜஸ்தானில் 969, மத்திய பிரதேசத்தில் 730, உத்தரப்பிரதேசத்தில் 660, தெலங்கானாவில் 624, கேரளாவில் 387, ஆந்திராவில் 483, குஜராத்தில் 650, கர்நாடகாவில் 260 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இந்தியாவில் 24 மணிநேரத்தில் புதிதாக 1,076 பேருக்கு கரோனா இருப்பது உறுதியான நிலையில், 38 பேர் இறந்துள்ளனர். இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.