ADVERTISEMENT

'1,24,12,664 மாதிரிகள் கரோனா பரிசோதனை'- ஐ.சி.எம்.ஆர். தகவல்!

09:16 AM Jul 15, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

நாடு முழுவதும் நேற்று வரை (14/07/2020) மொத்தம் 1,24,12,664 கரோனா பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதேபோல் நாடு முழுவதும் நேற்று (14/07/2020) மட்டும் 3,20,161 மாதிரிகள் கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர். குறிப்பிட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் நேற்று (14/07/2020) வரை மொத்தம் 16,95,365 மாதிரிகள் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் நேற்று (14/07/2020) மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் 41,357 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழகம், புதுச்சேரி, டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் நாள்தோறும் கரோனா பரிசோதனையை அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT