Skip to main content

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,10,461 ஆக உயர்வு!

Published on 21/06/2020 | Edited on 21/06/2020


 

INDIA CORONAVIRUS PEOPLES MINISTRY OF HEALTH AND FAMILY WELFARE

 

இன்று (21/06/2020) காலை 08.00 மணி நிலவரப்படி, இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,95,048- லிருந்து 4,10,461 ஆக உயர்ந்துள்ளது.

இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,948- லிருந்து 13,254 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை  2,13,831- லிருந்து 2,27,756 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதித்த 1,69,451 பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

 

india coronavirus peoples ministry of health and family welfare

 

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 1,28,205 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 64,153 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த மாநிலத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,984 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் 56,845, டெல்லியில் 56,746, குஜராத்தில் 26,680, ராஜஸ்தானில் 14,536, மத்திய பிரதேசத்தில் 11,724, உத்தரப்பிரதேசத்தில் 15,594, ஆந்திராவில் 8,452, தெலங்கானாவில் 7,072, கர்நாடகாவில் 8,697, கேரளாவில் 3,039, புதுச்சேரியில் 286 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

india coronavirus peoples ministry of health and family welfare

 

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்குக் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15,413 பேருக்கு கரோனா உறுதியான நிலையில், கரோனா வைரஸ் பாதிப்பால் 306 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்