INDIA CORONAVIRUS MINISTRY OF HEALTH AND FAMILY WELFARE

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இருப்பினும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Advertisment

Advertisment

இன்று (04/06/2020) காலை 08.00 மணி நிலவரப்படி இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,07,615- லிருந்து 2,16,919 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,815- லிருந்து 6,075 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,00,303 லிருந்து 1,04,107 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதித்த 1,06,737 பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 74,860 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 32,329 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 2,587 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் தமிழகத்தில் 25,872, குஜராத்தில் 18,100, டெல்லியில் 23,645, ராஜஸ்தானில் 9,652, மத்திய பிரதேசத்தில் 8,588, உத்தரப்பிரதேசத்தில் 8,729, ஆந்திராவில் 4,080, தெலங்கானாவில் 3,020, கர்நாடகாவில் 4,063, கேரளாவில் 1,494, புதுச்சேரியில் 82 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 9,304 பேருக்கு கரோனா கண்டறியப்பட்ட நிலையில், 260 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.