Advertisment

இந்தியாவில் 30 லட்சத்தைக் கடந்தது கரோனா... ஒரே நாளில் 912 பேர் பலி!

INDIA CORONAVIRUS MINISTRY OF HEALTH AND FAMILY WELFARE

Advertisment

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இன்று (23/08/2020) காலை 08.00 மணி நிலவரப்படி, இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,75,701- லிருந்து 30,44,940 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55,794- லிருந்து 56,706 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 22.22 லட்சத்திலிருந்து 22.80 லட்சமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் ஒரே நாளில் 57,989 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். கரோனா பாதித்த 7.07 லட்சம் பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

INDIA CORONAVIRUS MINISTRY OF HEALTH AND FAMILY WELFARE

Advertisment

இந்தியாவில் ஒரே நாளில் 69,239 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் கரோனாவுக்கு 912 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் கரோனா உயிரிழப்பு விகிதம் 1.86% ஆகவும், குணமடைந்தோர் விகிதம் 74.90% ஆகவும் உள்ளது. இந்த தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

coronavirus Delhi ICMR India Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe