Advertisment

இந்தியாவில் 3.32 லட்சம் பேருக்கு கரோனா!

india coronavirus ministry of health and family welfare

Advertisment

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இன்று (15/06/2020) காலை 08.00 மணி நிலவரப்படி, இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,20,922- லிருந்து 3,32,424 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,195- லிருந்து 9,520 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,62,379- லிருந்து1,69,798 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதித்த 1,53,106 பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

india coronavirus ministry of health and family welfare

Advertisment

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 1,07,958 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 50,978 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 3,950 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் தமிழகத்தில் 44,661, டெல்லியில் 41,182, குஜராத்தில் 23,544, ராஜஸ்தானில் 12,694, மத்திய பிரதேசத்தில் 10,802, உத்தரப்பிரதேசத்தில் 13,615, ஆந்திராவில் 6,163, தெலங்கானாவில் 4,974, கர்நாடகாவில் 7,000, கேரளாவில் 2,461, புதுச்சேரியில் 194 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11,502 பேருக்கு கரோனா உறுதியான நிலையில், கரோனா வைரஸ் பாதிப்பால் 325 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

MINISTRY OF HEALTH AND FAMILY WELFARE coronavirus India
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe