/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/CORONA 4563.jpg)
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை நெருங்கியது. அதேபோல் உலகளவில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் இந்தியா 4- ஆவது இடத்தில் உள்ளது. உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 20 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசிலில் 8 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தடுத்த இடத்தில் உள்ள ரஷ்யாவில் 5 லட்சம் பேரும், இந்தியாவில் 2.97 லட்சம் பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (12/06/2020) காலை 08.00 மணி நிலவரப்படி, இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,86,579- லிருந்து 2,97,535 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,102- லிருந்து 8,498 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,41,029- லிருந்து 1,47,195 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதித்த 1,41,842 பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/MINISTRY 7896.jpg)
அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 97,648 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 46,078 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 3,590 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல் தமிழகத்தில் 38,716, டெல்லியில் 34,687, குஜராத்தில் 22,032, ராஜஸ்தானில் 11,838, மத்திய பிரதேசத்தில் 10,241, உத்தரப்பிரதேசத்தில் 12,088, ஆந்திராவில் 5,429, தெலங்கானாவில் 4,320, கர்நாடகாவில் 6,245, கேரளாவில் 2,244, புதுச்சேரியில் 157 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,956 பேருக்கு கரோனா உறுதியான நிலையில், கரோனா வைரஸ் பாதிப்பால் 396 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Follow Us