india coronavirus ministry of health and family welfare

Advertisment

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் அமலில் உள்ள மூன்றாம் கட்டஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இன்று (13/05/2020) காலை 08.00 மணி நிலவரப்படி இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,756- லிருந்து 74,281 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,293- லிருந்து 2,415 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 22,455- லிருந்து 24,386 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கரோனாவால் 47,480 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

india coronavirus ministry of health and family welfare

Advertisment

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 24,427 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5,125 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 921 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் குஜராத்தில் 8,903, தமிழகத்தில் 8,718, டெல்லியில் 7,639,ராஜஸ்தானில் 4,126,மத்திய பிரதேசத்தில் 3,986, உத்தரப்பிரதேசத்தில் 3,664, ஆந்திராவில் 2,090, தெலங்கானாவில் 1,326, கர்நாடகாவில் 925, கேரளாவில் 524, புதுச்சேரியில் 13 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,525 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், 122 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.