/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ministry of 3222.jpg)
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது.
இன்று (19/12/2020) காலை 08.00 மணி நிலவரப்படி, இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 99,79,447-ல் இருந்து 1,00,04,599 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,44,789-லிருந்து 1,45,136 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 95.20 லட்சத்திலிருந்து 95.50 லட்சமானது. குறிப்பாக, ஒரே நாளில் 29,885 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். கரோனா பாதித்த 3.08 லட்சம் பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 25,153 பேருக்கு கரோனா உறுதிச் செய்யப்பட்ட நிலையில், 347 பேர் உயிரிழந்தனர்.இந்தியாவில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 95.46%; உயிரிழப்பு விகிதம் 1.45% ஆக உள்ளது. இந்த தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Follow Us