ADVERTISEMENT

"இந்தியாவில் 3.85,76,510 கரோனா மாதிரிகள் பரிசோதனை"- ஐ.சி.எம்.ஆர். தகவல்!

10:35 AM Aug 27, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

நாடு முழுவதும் நேற்று வரை (26/08/2020) மொத்தம் 3,85,76,510 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது. அதேபோல் நாடு முழுவதும் நேற்று (26/08/2020) ஒரே நாளில் மட்டும் 9,24,998 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழகத்தில் நேற்று (26/08/2020) வரை மொத்தம் 44,22,361 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று (26/08/2020) மட்டும் தமிழகத்தில் 75,500 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, புதுச்சேரி, டெல்லி, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் உட்பட பல்வேறு மாநில அரசுகளும் நாள்தோறும் கரோனா பரிசோதனைகளை தங்களது மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT