Advertisment

நாளை பேச்சுவார்த்தையில் ஈடுபடும் இந்திய இராணுவம்!

india china

Advertisment

இந்திய - சீன எல்லையில்,கல்வான்பள்ளத்தாக்கு பகுதியில்கடந்த வருடம் இரு நாடுகளுக்குமிடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள்வீர மரணமடைந்தனர். சீனா தரப்பில் 45 பேர் உயிரிழந்ததாகக்கூறப்பட்டது. இருப்பினும் சீனஇராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள்உட்படஐந்து பேர் பலியானதாக சீன இராணுவத்தின் அதிகாரப்பூர்வ பத்திரிகைசெய்தி வெளியிட்டது.

இந்தியா - சீனாஇடையேயான மோதலைத் தொடர்ந்து, இரு நாடுகளும் எல்லையில் படைகளைக் குவித்தன. இதனால் எல்லையில் பதற்றம் நிலவியது. இதனையடுத்து இரு நாடுகளும், பதற்றத்தைத் தணிக்க பேச்சுவார்த்தையில் இறங்கின. இந்தப் பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவினைத்தொடர்ந்து,பங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில், இரு நாடுகளும் தம்படைகளை விலக்கின.

இரு நாடுகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின்போது,பாங்கோங் ஏரி பகுதியில் முழுமையான படைக்குறைப்பு செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள், மூத்த தளபதிகளின் அடுத்தக் கூட்டத்தைக் கூட்டவும், மீதமுள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கவும்இரு நாடுகளும் ஒப்புக்கொண்டிருந்தன. அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 10வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தநிலையில், இருநாட்டு இராணுவ அதிகாரிகளின் 11வது கட்ட பேச்சுவார்த்தை நாளை (09.04.2021) நடைபெறவுள்ளதாக இந்திய இராணுவவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

border china India
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe