இந்தியாவில் ராணுவ வீரர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
உலகத்தையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு பலியானோர் எண்ணிக்கை 7,965 ஆக அதிகரித்துள்ளது. 165 நாடுகளுக்கு பரவிய கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் 1,98,214 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் முதன் முறையாக ராணுவ வீரர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. ராணுவ வீரரின் தந்தை ஈரானுக்கு புனித பயணம் செய்து விட்டு திரும்பிய போது கரோனா இருப்பது தெரிந்தது. தந்தையிடம் இருந்து ராணுவ வீரருக்கும் வைரஸ் தொற்று பரவியுள்ளது.
ராணுவ வீரருக்கு கரோனா காரணமாக அவரது மனைவி, இரு குழந்தைகள், சகோதரி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ராணுவ வீரர் லடாக் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.