Advertisment

இந்தியாவில் ஒரே நாளில் 1,130 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழப்பு...

kl;

Advertisment

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை இரண்டு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 9 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவைப் பொறுத்தமட்டில் அதன் தாக்கம் என்பது மின்னல் வேகத்தில் உள்ளது. குறிப்பாக மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதன் பாதிப்பு என்பது மிக அதிகமாக இருந்து வருகின்றது. இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 54,87,581 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 43,96,399 பேர் நோய் தாக்குதலில் இருந்து மீண்டுள்ளனர். 89,909 பேர் இந்த நோய் தாக்குதல் காரணமாக மரணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 1,130 பேர் இறந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe