Skip to main content

முதல்வரைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம்; எம்.எல்.ஏவுக்கு உடல்நிலை பாதிப்பு

Published on 09/01/2023 | Edited on 09/01/2023

 

independent MLA continuous hunger struggle condemn puducherry CM Rangaswamy

 

புதுச்சேரி யூனியன் பிரதேச பிராந்தியத்துக்கு உட்பட்ட ஆந்திராவில் உள்ள ஏனாம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் கொலப்பள்ளி அசோக் ஸ்ரீநிவாஸ். இவர் புதுச்சேரி முதலமைச்சரும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமியை தோற்கடித்து வெற்றி பெற்றவர்.

 

முதலமைச்சர் ரங்கசாமியை தோற்கடித்து வெற்றி பெற்றதால் தனது தொகுதிக்கு எந்த விதமான நலத்திட்டங்களும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டி வருகிறார். இந்நிலையில் தொகுதி முற்றிலுமாக புறக்கணிக்கப்படுவதாகவும், எந்த ஒரு நலத்திட்ட உதவிகளும் செயல்படுத்தாததை கண்டித்தும் கடந்த 4 நாட்களாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

 

நேற்று முதலமைச்சர் ரங்கசாமி ஏனாம் தொகுதிக்குச் சென்றிருந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினரை சந்தித்து சமரசம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை சந்திக்காமல் புதுச்சேரிக்கு திரும்பி உள்ளார். அதேசமயம் நேற்று மாலை முதல் சட்டமன்ற உறுப்பினரின் உடல்நிலை சரி இல்லாமல் இருந்து வருகிறது. மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். போராட்டத்தைக் கைவிட்டு மருத்துவமனைக்கு வரும்படி மருத்துவர்கள் கூறி இருந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர் அசோக் கோரிக்கையை நிறைவேற்றும் வரை தனது போராட்டம் தொடரும் எனச் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். நான்கு நாட்களாக தொடரும் அசோக்கின் உண்ணாவிரதப் போராட்டத்தால் ஏற்பட்ட அவரது உடல்நிலை பாதிப்பு அவருடைய ஆதரவாளர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.