சிறுவாணி அணையின் நீர் சேமிப்பை அதிகரிக்குமாறு கேரள முதல்வர்பினராயிவிஜயனுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதி இருந்த நிலையில்பினராயிவிஜயன் விளக்கமளித்துள்ளார்.
நேற்று இதுதொடர்பாகதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியிருந்த கடிதத்தில், ''சிறுவாணி அணையில் நீர் சேமிப்பை அதிகரிப்பதால் கோவை பகுதியில் உள்ளமக்களுக்குத்தங்கு தடையின்றி குடிநீர் வழங்க முடியும் எனவே சிறுவாணி அணையின் முழு கொள்ளளவு நீர் சேமிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில்சிறுவாணி அணையிலிருந்து இன்று முதல் நீர் திறப்புஅதிகரிக்கப்பட்டுள்ளதாகக்கேரள முதல்வர்பினராயிவிஜயன் தெரிவித்துள்ளார். கேரள முதல்வரின் அறிவிப்பின்படிசிறுவாணி அணையில் நீர் திறப்பு 120எம்எல்டிஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.