Advertisment

போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதால் இந்தியா கேட் பகுதியில் பொதுமக்கள் கூட தடை!

கடந்த ஜனவரி 10- ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் டெல்லியில் மிகத்தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஷாஹீன் பாக் பகுதியில் கடந்த 70 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்களும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் பேரணி நடத்தினார்கள். அதில் இரு தரப்பினருக்கும் இடையே வன்முறை ஏற்பட்டு வாகனங்கள் மற்றும் பொதுச் சொத்துக்கள் தீவைக்கப்பட்டன.

Advertisment

இதனையடுத்து அங்கு பதட்டமான சூழல் உருவாகியது. இரு தரப்பினரும் கற்களை கொண்டு கடுமையான தாக்குதல்களில் ஈடுபட்டனர். இந்த வகையான தாக்குதல் அங்கு தொடர்ந்து வரும் சூழலில், இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த கலவரத்தை எதிர்த்து கேட்வே ஆஃப் இந்தியாவில் வெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற உள்ளதாகவும் அதில் அனைவரும் வலந்துகொள்ள வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதனால் பொதுமக்கள் அங்கே வர வாய்ப்புள்ளாதல் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தியா கேட் பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்லக்கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisment
riot
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe