Skip to main content

வருமான வரி ஏய்ப்பைத் தடுக்க அதிரடி காட்டும் வருமான வரித்துறை! 

Published on 14/07/2022 | Edited on 14/07/2022

 

The Income Tax Department is taking action to prevent income tax evasion!



ரொக்கமாக ஒரு ஆண்டில் பெரிய அளவில் பரிவர்த்தனை செய்தால், வருமான வரித்துறையின் இருந்து நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இதன் பின்னணி குறித்து விரிவாகப் பார்ப்போம். 

 

வருமான வரி ஏய்ப்பைக் கண்டறிய வருமான வரித்துறை பல்வேறு முன் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வங்கி டெப்பாசிட்டுகள், மியூச்சுவல் பண்ட்களில் செய்யப்படும் முதலீடுகள், சொத்து பரிமாற்றங்கள் மற்றும் பங்குச்சந்தைகளில் அதிகளவு செய்யப்படும் முதலீடுகளில் ஆன்லைன் மூலம் கண்காணித்து வருகிறது. 

 

இவற்றில் ஒருவர் செய்யும் முதலீடுகள் ஒரு குறிப்பிட்ட வரம்பைத் தாண்டினால் வருமான வரித்துறையிடம் தகவல் அளிக்க வேண்டும். அப்படி, தகவல் அளிக்காவிட்டால், சம்மந்தப்பட்ட நபருக்கு வருமான வரித்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புகின்றது. 

 

சேமிப்புக் கணக்கில் ஆண்டுக்கு ரூபாய் 10 லட்சத்திற்கு அதிகமாக ரொக்கமாக பணப்பரிவர்த்தனை செய்தால், வருமான வரித்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும். நடப்பு கணக்கிற்கு இந்த வரம்பு ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாயாக உள்ளது. ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வங்கி டெப்பாசிட்டுகளில் ரொக்கமாக முதலீடு செய்தால், தகவல் அளிக்க வேண்டும். 

 

கடன் அட்டைப் பரிவர்த்தனைகளுக்கு ரொக்கமாக செலுத்தப்படும் தொகை ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருந்தால் தகவல் அளிக்க வேண்டும். கடன் அட்டைகள் மூலம் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கும் அதிக தொகை பரிவர்த்தனைச் செய்யப்பட்டால், வருமான வரித்துறைத் தாக்கல் படிவத்தில் தெரிவிக்க வேண்டும். 

 

பத்திரப்பதிவு அலுவலகங்களில் 30 லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய சொத்துகள் பதிவு செய்யப்பட்டால், அதைப் பற்றிய தகவல்கள் வருமான வரித்துறைக்கு அனுப்பப்படுகிறது. பங்குகள், கடன் பத்திரங்கள்,  மியூச்சுவல் பண்டுகளில் ரொக்கமாக செய்யப்படும் முதலீடுகளின் அளவு ஆண்டுக்கு ரூபாய் 10 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் தகவல் அளிக்க வேண்டும். 

 

அன்னிய செலாவணி விற்பனை மூலம் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கும் அதிக தொகை கிடைத்தால், வருமான வரித்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும். பான் எண் எனப்படும், வருமான வரி நிரந்தர கணக்கு எண், தற்போது பெரும்பாலான பரிவர்த்தனைகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எம்.பி. வீட்டில் ரூ.351 கோடி பறிமுதல்; மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
jharkhand congress MP Rs.351 crore seized at home; information released by the Central Board of Direct Taxes

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை எம்.பி தீரஜ் குமார் சாகு. ஒடிசாவில், இவருக்கு தொடர்புடைய மதுபான ஆலை ஒன்றில் வரிஏய்ப்பு நடந்திருப்பதாக வருமான வரித்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 5 நாட்களாக சோதனை நடத்தி வந்தனர். ஒடிசா மாநிலத்தில் எம்.பி தீரஜ் குமார் சாகுவுக்கு தொடர்புடைய இடங்கள், அலுவலகங்கள் என பல்வேறு இடங்களிலும், அதேபோல் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களிலும் அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வந்தனர். 

இந்த சோதனையில் எம்.பிக்கு சொந்தமான அலுவலகங்களில் 10 பீரோக்களில் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை பறிமுதல் செய்து எண்ணத் தொடங்கினர். இதில் தொடர்ந்து பணம் எண்ணியதால் பணம் எண்ணும் இயந்திரங்கள் பழுதடைந்தன. இதனைத் தொடர்ந்து பல்வேறு வங்கிகளில் இருந்து பணம் எண்ணும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பணம் எண்ணப்பட்டது. மேலும் இந்த பணியில் வருமான வரித்துறையினர், மூன்று வங்கியின் பணியாளர்கள் என மொத்தம் 80 பேர் பணியாற்றியதாக தெரிவிக்கப்பட்டது.

விடிய விடிய 4 நாட்களாக எண்ணப்பட்ட மொத்த பணத்தின் மதிப்பு ரூ.350 கோடி என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பல்வேறு பகுதிகளில் தங்கம் மற்றும், ரொக்கங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியிருந்தது. அதன் அடிப்படையில், ஒடிசாவில் 6 இடங்கள், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மற்றும் மேற்கு வங்கத்தில் சில இடங்கள் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் கட்சியை பா.ஜ.க கடுமையாக விமர்சித்து வருகிறது.

இந்த நிலையில், மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று (21-12-23) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது, “ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியைச் சேர்ந்த ஒரு அரசியல் பிரபலத்தின் குடும்பத்தினரால் டிஸாவில் நிர்வகிக்கப்படும் பெளத் மதுபான தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிரான வருமான வரிச்சோதனையில், பெருமளவிலான வருமானம் மறைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இந்த சோதனையின் போது, கணக்கில் காட்டப்படாத ஏராளமான ஆவணங்கள், பண ரசீதுகளின் விவரங்கள், பணம் எங்கு மாற்றப்பட்டது என்பதற்கான குறிப்புகள் அடங்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

அதில், ரூ.351 கோடிக்கு மேல் கணக்கில் காட்டாத ரொக்கப் பணமும், கணக்கில் வராத ரூ.2.80 கோடி மதிப்பிலான நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் பெரும் பகுதி பணம், ஒடிசாவின் சிறு நகரங்களில் அமைந்துள்ள பாழடைந்த கட்டிடங்கள், மறைக்கப்பட்ட அறைகள், மறைக்கப்பட்ட இல்லங்கள், ரகசிய அறைகள் உள்ளிட்ட இடங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணமானது, நிறுவனத்தின் கணக்கில் காட்டப்படாத வருமானம் என்பதை அந்நிறுவனத்தின் முக்கிய ஊழியர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது.

Next Story

சென்னையில் பல இடங்களில் ஐ.டி ரெய்டு

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

 IT raided many places in Chennai

 

சென்னையில் இன்று 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

சென்னை பட்டாளம், தி.நகர், வேப்பேரி, கோபாலபுரம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது. ஜவுளி நிறுவன உரிமையாளர் நீலகண்டனுக்கு சொந்தமான கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சோதனை நடைபெற்று வருவதாகவும், சென்னை நுங்கம்பாக்கம் மண்ணடியில் உள்ள தொழிலதிபர் வீடுகளிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

பெங்களூரிலிருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை அதிகாரிகளின் உதவியுடன் இந்தச் சோதனையை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.