Skip to main content

நினைத்தபோதெல்லாம் புதையல் தரும் 'அட்சய பாத்திரம்'- தொழிலதிபரை ஏமாற்றி 2 கோடி அபேஸ்!  

Published on 12/02/2020 | Edited on 12/02/2020

புராண கதைகளில் நாம் கேள்விப்பட்டிருப்போம் ' அட்சய பாத்திரம்'. என்ற வார்த்தையை. அதாவது அள்ள அள்ள குறையாமல் பணம், உணவு பொருட்களை தரும் பாத்திரம் என்று கதைகளில் கேள்விப்பட்டிருப்போம். அப்படிபட்ட பாத்திரம் தன்னிடம் உள்ளதாகவும், நினைத்த போதெல்லாம் அந்த பாத்திரத்தில் பணம், தங்கம் புதையலாக வரும் என சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் தொழிலதிபரை ஏமாற்றிய கும்பலை கைது செய்திருக்கிறது காவல்துறை.

 

police

 

திருப்பதி அருகில் உள்ள திருப்பத்தூர் என்ற இடத்தில் நடந்திருக்கிறது இந்த வினோத மோசடி. திருப்பதி, திருப்பத்தூரை சேர்ந்த தொழிலதிபர் நவீன் என்பவரிடம் வந்த கும்பல் ஒன்று தங்களிடம் அட்சய பாத்திரம் உள்ளதாகவும், நினைத்தபோதெல்லாம் அதில் பணம், நகை வரும் என கூறி அணுகியுள்ளனர். அதனை நிரூபிக்கும் வகையில் சித்தூர் அருகே நவீனை அழைத்து சென்று ஏற்கனவே மறைத்து வைக்கப்பட்டிருந்த பெட்டியில் சில நகைகளை எடுத்துக்காட்டி நம்ப வைத்துள்ளனர். இதை உண்மை என்று நம்பிய நவீன் குடிப்பள்ளி என்ற இடத்தில் வைத்து சுமார் 2.10  கோடி ரூபாய் கொடுத்து அந்த பெட்டியை வாங்கியுள்ளார்.

 

incident in thirupathi... police arrest


பூஜையில் வைத்து பின்னர் திறந்து பாருங்கள் என ஆருடம் கூறிவிட்டு மறைந்தது அந்த கும்பல். இதனை நம்பி பூஜையில் பெட்டியை தொழிலதிபர் நவீன் வைத்து விட்டு உள்ளே திறந்து பார்த்துள்ளார். ஆனால் உள்ளே ஒன்றும் இல்லை இதனால் அதிர்ந்து போன நவீன் அந்த பெட்டியை பல இடங்களில் வைத்து சோதனை செய்தும் பணம் நகை வராததால் பணம் கொடுத்த இடமான குடிப்பள்ளியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

 

police


இந்த வினோத புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தி வந்த நிலையில், குடிப்பள்ளி ரயில்நிலையத்தின் அருகே 8 பேர் கொண்ட கும்பலை கைது செய்து, ஒவ்வொருவர் வீட்டிலும் இரண்டாயிடம், ஐநூறு ரூபாய் நோட்டுகள் என கட்டுக்கட்டாக பணத்தை பறிமுதல் செய்தனர். மொத்தம்  1.29 கோடி ரூபாய் ரொக்கம், இரண்டு கார்கள், ஒரு இருசக்கர வாகனம் என மொத்தமாக அவர்களிடம் பறிமுதல் செய்தனர்.

 

police


கிருஷ்ணகிரி சேகர், ராமச்சந்திரா, காஞ்சிபுரம் விநாயகம், கர்நாடகாவை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 8 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நவீன காலத்திலும்   அட்சய  பாத்திரம் என ஒன்று இருப்பதாக நம்பி ஏமார்ந்த சம்பவம் சற்று அதிர்ச்சியைத்தான் கிளப்பியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களவைத் தேர்தல்; 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Lok Sabha elections 2nd Phase voting has started

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதனையடுத்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதாவது கர்நாடகா, ராஜஸ்தான், அசாம், பீகார், கேரளா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள உள்ள 42 தொகுதிகளில் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார் மாநிலங்களில் தலா 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அதே போன்று மகாராஷ்டிராவில் 8 தொகுதிகளுக்கும், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கும், ஜம்மு - காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் என வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்