Skip to main content

லாரி மோதி 9 பேர் உயிரிழப்பு... துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்புகையில் நிகழ்ந்த சோகம்!

Published on 09/05/2022 | Edited on 09/05/2022

 

Incident in telungana

 

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற நிலையில் விபத்தில் சிக்கியதில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தெலுங்கானா மாநிலத்தில் காமாரெட்டி மாவட்டத்தில் பயணிகள் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் 9  பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் எல்லாரெட்டி என்ற பகுதியில் துக்க நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு திரும்பிய போது லாரி மோதி விபத்து ஏற்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

 

முதலில் இந்த சம்பவத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட மேலும் 5 பேர் உயிரிழந்தனர். இதனால் இந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக இருக்கிறது. காயமடைந்தவர்களுக்குத் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து சம்பவத்துக்கு  இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்கள் ஐம்பதாயிரம் ரூபாயும் நிவாரணமாக அறிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்