Skip to main content

திருமணத்திற்கு ஆடை வாங்க சென்ற மணப்பெண், விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

Published on 30/01/2021 | Edited on 30/01/2021

 

incident in telungana

 

திருமணத்திற்கு ஆடை வாங்க சென்ற மணப்பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்த  சம்பவம் தெலுங்கானாவில் நடந்துள்ளது.

 

தெலுங்கானா மகபூப்நகர் அருகே மிர்மிட்டாவில் இன்று (30.01.2021) திருமணத்திற்கு ஆடை வாங்குவதற்காக மணப்பெண் பிரமிளா உறவினர்களுடன் ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது எதிரே வந்த லாரி மோதியதில் ஆட்டோவிலிருந்த மணப்பெண் பிரமிளா உட்பட 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10 நாட்களில் திருமண நடைபெற இருந்த நிலையில் மணப்பெண் உயிரிழந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

incident in telungana

 

இந்த சம்பவத்தைக் கண்டித்து மணப்பெண்ணின் உறவினர்கள் தற்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்