ADVERTISEMENT

மேற்கு வங்க வாக்குச்சாவடியில் துப்பாக்கிசூடு...

09:24 AM Mar 27, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளில் 196 வேட்பாளர்களும், அசாமில் 47 தொகுதிகளில் 264 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டமாகவும், அசாமில் 126 தொகுதிகளுக்கு மூன்று கட்டமாகவும் தேர்தல் நடைபெறுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தேர்தல் நடக்கும் வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கரோனா பரவலை தடுக்க வாக்காளர்கள் மாஸ்க் மற்றும் கையுறை அணிந்தபடி வாக்களித்து வருகின்றனர். கரோனா பாதித்தவர்கள் கடைசி நேரத்தில் வாக்களிக்க ஏதுவாக ஒருமணி நேரம் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT