Skip to main content

சக உறுப்பினரால் டாா்ச்சா்... கட்சி அலுவலகத்திலேயே மா.கம்யூனிஸ்ட் பெண் உறுப்பினா் தற்கொலை!

Published on 12/09/2020 | Edited on 12/09/2020

 

INCIDENT IN KERALA

 

கேரளாவில் பிணராய் விஜயன் தலைமையிலான மா. கம்யூனிஸ்ட் அரசு செயல்பட்டு வருகிறது. இன்னும் 7 மாதத்தில் தோ்தலைச் சந்திக்க இருக்கும் கேரளாவில், ஆளும் கட்சியும், எதிா்க் கட்சிகளும் தொடா்ந்து கட்சி நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா் கூட்டங்களைக் கிளைகள் வாாியாக நடத்தி வருகின்றனா். அந்த வகையில் கட்சி கூட்டத்துக்குச் சென்ற மா. கம்யூனிஸ்ட் பெண் உறுப்பினா் கட்சி அலுவலகத்துக்குள் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் பாறசாலை அழகிகோணத்தைச் சோ்ந்தவா் ஸ்ரீகுமாா். இவருடைய மனைவி ஆஷா, மா. கம்யூனிஸ்ட் கட்சியில் 15 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்து வந்தாா். மேலும் பாறசாலை ஏாியா கமிட்டியில் கட்சிப் பணிகளை மேற்கொண்டு வந்தாா். இந்த நிலையில் வியாழக்கிழமை பாறசாலை கட்சி அலுவலகத்தில் நடந்த  கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்ட ஆஷா இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய கணவா் கட்சி அலுவலகம் வந்து விசாாித்து விட்டு உறவினா்கள் வீடுகளிலும் சென்று விசாாித்தாா்.

ஆஷாவை எங்கும் காணாததால் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை கட்சி நிா்வாகிகளோடு உறவினா்களும் தேடி வந்தனா். இந்த நிலையில் பாறசாலையில் திறக்கப்படாமல் இருந்த புதிய கட்சி அலுவலகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக ஆஷா இருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

அவருக்கு அருகில் கிடந்த கடிதத்தில், "கட்சியின் கிளைச் செயலாளா் அஸ்தன் ஜாய் மற்றும் கட்டமண்ராஜன் இருவரும் தொடா்ந்து தனக்கு டாா்ச்சா் தந்ததாலும், மேலும் இரட்டை அா்த்தத்தில் அருவறுப்பான வாா்த்தைகளால் பேசி எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வந்தனா். இது சம்மந்தமாக கட்சி மேல்மட்ட தலைவா்களுக்கு புகாா் அனுப்பியும் அவா்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

மேலும் இன்று நடந்த கட்சி கூட்டத்திலும் என்னை தவறாக பேசியதால் தற்கொலை செய்து கொள்கிறேன்" என எழுதியிருந்தார். இது கட்சியினா் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அங்கு பொதுமக்கள் மற்றும் உறவினா்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி ஆஷாவின் உடலை திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

 

Ad

 

இந்தச் சம்பவம் முதல்வா் பிணராய் விஜயனின் நேரடி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் பாறசாலை சப்- இன்ஸ்பெக்டா் ரதீஷ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா். மேலும் எதிா்க்கட்சி தலைவா் காங்கிரஸ் ரமேஷ் சென்னிதல, கம்யூனிஸ்ட் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பல சம்பவங்கள் உணா்த்தியுள்ளது. இதில் தொடா்புடைய கம்யூனிஸ்ட் காரா்களை உடனே கைது செய்ய வேண்டும். மேலும் நோ்மையான ஒரு டி.ஜி.பியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்றாா்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Police register cheating case against producers of Manjummel Boys

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்தார். இப்படம் கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

ad

சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர். இப்படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து மலையாள திரையுலகில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனையை படைத்தது. இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான பரவா பிலிம்ஸ் பங்குதாரர் ஷான் ஆண்டனி, லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக கேரளா அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “ மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்காக ரூ.7 கோடியை முதலீடு செய்தேன். பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்தார். ஆனால் இதுவரை எனக்கு ஒரு ரூபாய் கூட பணம் தரவில்லை. லாபம் மட்டும் இல்லாமல் முதலீடு செய்த பணத்தை கூட திருப்பி தரவில்லை” என குற்றம் சாட்டியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் வுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகிய மூன்று பேர் மீதும் மரடு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எர்ணாகுளம் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.