Skip to main content

ஸ்டீராய்டு ஊசி செலுத்தி மனைவி நரபலி...  9 மாதங்களுக்குப் பிறகு தெரிந்த அதிர்ச்சி காரணம்!

Published on 27/10/2021 | Edited on 28/10/2021

 

incident in karnataka

 

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் நியாமதி தாலுகாவில் ராமேஸ்வரா கிராமத்தைச் சேர்ந்தவர் டாக்டரான சன்னேசப்பா(48). இவரது மனைவி ஷில்பா.  சன்னேசப்பா-ஷில்பா தம்பதிக்கு இரு குழந்தைகள் இருந்தனர். பெலகுத்தி கிராமத்தில் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார் சன்னேசப்பா. திருமணத்திற்குப் பிறகு சன்னேசப்பா மது, சூதாட்டம் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் வேதனையடைந்த சன்னேசப்பாவிடம் மனைவி ஷில்பா சண்டையிட்டுள்ளார். மேலும் மனைவி ஷில்பாவின் நடத்தை மீது சன்னேசப்பா சந்தேகம் கொண்டுள்ளார். இதனால் இவர்களுக்கிடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டுவந்துள்ளது.

 

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி மனைவிக்கு இரத்த அழுத்தம் குறைவாக இருப்பதாகக்கூறி ஸ்டீராய்டு ஊசியை அதிகமாகச் செலுத்தியுள்ளார். இதனால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டார். ஒருகட்டத்தில் படுத்தப்படுக்கையான மனைவிக்குச் சிகிச்சை அளிக்கக் கூட்டிச் செல்வதாக காரில் அழைத்துச் சென்ற சன்னேசப்பா இறுதியில் மனைவி இறந்துவிட்டதாகச் சடலத்துடன் வந்துள்ளார்.

 

incident

 

இந்த உயிரிழப்பு குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், ஷில்பாவின் உடல்பாகங்கள் ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. கடந்த 18 ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு முடிவில் டெக்ஸாமேதாஸோன் ஷில்பாவின் உடலில் அதிக அளவிலிருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக மருத்துவரான சன்னேசப்பாவை போலீஸார் பிடித்து விசாரித்ததில், மாந்திரீகம் செய்யும் மந்திரவாதி ஒருவரை அணுகியபோது மனித உயிர் ஒன்றைப் பலியிட்டால் உங்களுக்குச் செல்வம் சேரும் எனக் கூறியுள்ளான் அந்த மந்திரவாதி. இதனை நம்பிய சன்னேசப்பா மனைவி ஷில்பாவை பலிகொடுக்கத் திட்டமிட்டுள்ளார். மந்திரவாதியின் பேச்சைவிட்டு மனைவியை ஸ்டீராய்டு ஊசி செலுத்தி கொலை செய்ததை சன்னேசப்பா ஒப்புக்கொண்டான். பின்னவர் அவரை போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

“எனது இறுதிச்சடங்கிற்காவது வாருங்கள்” - கார்கே பேச்சு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Karke emotional speech at karnataka for lok sabha election

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளில் நாளை (26-04-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. அதில் கர்நாடகா மாநிலம், கலபுர்கி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மருமகன் ராதாகிருஷ்ண தொட்டாமணி போட்டியிடுகிறார்.

அதன்படி, காங்கிரஸ் சார்பில் அப்சல்பூர் பகுதியில் நேற்று நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ண தொட்டாமணியை ஆதரித்து மல்லிகார்ஜுன கார்கே வாக்கு சேகரித்து பேசினார். அப்போது அவர், “மக்கள் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்கவில்லை என்றால், கலபுர்கியில் தனக்கு இடமில்லை என்று அவர் கருதுவார். இந்த முறை காங்கிரஸ் வேட்பாளருக்கு நீங்கள் வாக்களிக்கவில்லை என்றால், எனக்கு இங்கு இடமில்லை, உங்கள் இதயத்தை என்னால் வெல்ல முடியாது என்று நினைப்பேன். 

காங்கிரஸுக்கு உங்கள் வாக்கு கிடைக்கலாம் அல்லது கிடைக்காவிட்டாலும், என்னுடைய நல்ல செயல்களை நினைவுகூர்ந்து என் இறுதிச் சடங்கிற்கு வாருங்கள். தகனம் செய்தால் மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கவும் அல்லது புதைக்கப்பட்டால் மண்ணை வழங்கவும். எனது இறுதி ஊர்வலத்தின் போது அதிகமான மக்கள் குவிந்தால் நான் சில நல்ல செயல்களைச் செய்துள்ளேன் என்பதை மற்றவர்கள் உணர்வார்கள். உங்கள் வாக்கு வீண் போகக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். 

கலபுர்கி மக்கள் அவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். துரதிர்ஷ்டவசமாக, கடந்த தேர்தலில் நான் தோல்வியை சந்தித்தேன். எம்.பி., அமைச்சராக இருந்து நான் செய்த வளர்ச்சிப் பணிகள் உங்களுக்குத் தெரியும். மீண்டும் காங்கிரஸ் கட்சி தோற்றால் உங்கள் இதயத்தில் எனக்கென்று இடமில்லை என்று கருதுகிறேன். நான் அரசியலுக்காக பிறந்தவன். நான் தேர்தலில் போட்டியிடுகிறேனோ, இல்லையோ, இந்த நாட்டின் அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற எனது கடைசி மூச்சு வரை பாடுபடுவேன். அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன்” என்று கூறினார்.