The Incident happened to the girl who was alone at home in karnataka

கர்நாடகா மாநிலம், மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. சம்பவம் நடந்த அன்று, இந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை கவனித்த, அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (25) என்பவர், வீடு புகுந்து சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமைகளை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், கிருஷ்ணமூர்த்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

அதன் பின், போலீஸ் நடத்திய விசாரணையில், சிறுமி வசித்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, கேரளாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மாதந்தோறும் விடுமுறைக்கு வரும் கிருஷ்ணமூர்த்தி, கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஸ்ரீரங்கப்பட்டணா பகுதிக்கு வந்துள்ளார். அங்கு சென்ற அவர், நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற சிறுமியை கவனித்த கிருஷ்ணமூர்த்தி, சிறுமியை பின் தொடர்ந்து சென்றுள்ளார். இதனால், பதற்றமடைந்த சிறுமி உடனடியாக தனது வீட்டுக்குச் சென்றதையடுத்து, கிருஷ்ணமூர்த்தி அங்கிருந்து சென்றுள்ளார். அடுத்த நாள், பெற்றோர் இல்லாத நேரம் பார்த்து வீட்டில் தனியாக இருந்த சிறுமியை நோட்டமிட்ட கிருஷ்ணமூர்த்தி, வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.

Advertisment

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வீட்டில் தனியாக இருந்த சிறுமியை, வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.