'Incident of cutting up the body and cooking it in a cooker' - The full story of revealed

கணவனே மனைவியை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை குக்கரில் வேகவைத்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த சம்பவத்தின் முழு பின்னணி தற்போது வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் முன்னாள் ராணுவ வீரரான குருமூர்த்தி என்பவர் மனைவி மாதவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்திருந்தார். மாதவிக்கும் குருமூர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி இருவரும் சண்டையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி மாதவி திடீரென காணாமல் போனதால் மாதவியின் வீட்டார் பல இடங்களில் தேடி வந்தனர்.

காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குருமூர்த்தியின் நடவடிக்கைகளால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் மாதவியை கொன்று அவரை துண்டு துண்டாக வெட்டி அதனைக் குக்கரில் வேகவைத்து எடுத்து பின்னர் குளத்தில் வீசியதை ஒப்புக்கொண்டார். இதனைக் கேட்டு போலீசாரே அதிர்ச்சியில் உறைந்தனர்.

Advertisment

இந்த சம்பவத்தில் தீவிரமாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சம்பவத்தின் முழு பின்னணி வெளியாகியுள்ளது. கடந்த 15 ஆம் தேதி குருமூர்த்தி தன்னுடைய மனைவி மாதவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மனைவி மாதவியின் தாய் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு அன்று மாலையே குருமூர்த்தியும் மாதவியும் வீடு திரும்பியுள்ளனர். மாதவியை தாயார் தொலைபேசியில் அழைத்துள்ளார். ஆனால் தொடர்ந்து பலமுறை அழைத்தும் அவர் செல்போனை எடுக்கவில்லை. இதனால் அச்சமடைந்த அவர் குருமூர்த்தியின் வீட்டிற்கு நேரில் சென்று பார்த்துள்ளார். அப்பொழுது 'செல்போனுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற மாதவி இன்னும் வீடு திரும்பவில்லை' என குருமூர்த்தி தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த மாதவியின் தாய் மீர்பேட் காவல் நிலையத்தில் தன்னுடைய மகள் காணாமல் போனதாக புகார் அளித்தார்.

போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் மாதவி குருமூர்த்தி இடையே அடிக்கடி சண்டை இருந்து வந்தது தெரிந்தது. அக்கம்பக்கத்தினரும் இந்த தகவலை உறுதிப்படுத்தினர். இதனால் குருமூர்த்தி மீது சந்தேகமடைந்த போலீசார் வீட்டுக்கு வெளியே இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மாதவி வீட்டுக்குள் சென்ற காட்சி மட்டுமே பதிவாகி இருந்தது. அவர் வீட்டை விட்டு வெளியேறவில்லை என்பது சிசிடிவி காட்சி மூலம் உறுதி செய்யப்பட்டது. இதனால் போலீசாரின் சந்தேகம் குருமூர்த்தி மீது மேலும் அதிகமானது. அதனைத் தொடர்ந்து குருமூர்த்தியிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

'Incident of cutting up the body and cooking it in a cooker' - The full story of revealed

Advertisment

விசாரணையில் இறுதியாக குருமூர்த்தி கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். கொலை செய்யப்பட்ட மாதவியின் உடல் எங்கே என போலீசார் கேட்டபொழுது உடலை கை, கால் என தனித்தனியாக வெட்டி சின்ன சின்ன கவர்களில் வைத்து ஏரி அருகே உள்ள குப்பை கிடங்கில் வீசியதாக தெரிவித்தார். அந்த குப்பைகளை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர்என தெரிவித்துள்ளார். குருமூர்த்தி சொன்னதை உண்மையா நினைத்துக்கொண்டு போலீசார் தேடிச்சென்ற பொழுது அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

மீண்டும் குருமூர்த்தியிடம் விசாரணை நடைபெற்றது. அப்போது முழு பின்னணியும் வெளியானது. 16ஆம் தேதி காலை 10 மணி அளவில் குருமூர்த்திக்கும் மாதவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது மாதவியின் தலையை சுவரில் அடித்துள்ளார். இதனால் மாதவி மயங்கி கீழே விழுந்துள்ளார். அதன் பிறகு மாதவியின் மேல் அமர்ந்த குருமூர்த்தி அவருடைய கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி வெதுவெதுப்பான நீரில் அலசி குக்கரில் வைத்து வேக வைத்துள்ளார். பின்னர் வேகவைத்த உடலை காய வைத்து பொடியாக அரைத்து அந்த பொடியை 10 லிட்டர் கொண்ட பெயிண்ட் பக்கெட்டுகளில் கொட்டி எடுத்துச் சென்று அதை ஏரியில் கறைத்துள்ளார். அதன் பின்னர் வீட்டுக்கு வந்த குருமூர்த்தி வீட்டை முழுமையாக சுத்தம் செய்ததுடன் துர்நாற்றம் வராமல் இருப்பதற்காக ஸ்பிரேவை பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. அதேபோல் குருமூர்த்தி செல்போனை ஆய்வு செய்ததில் 'சிக்காமல் கொலை செய்வது எப்படி?" என யூடியூபில் வீடியோக்களை அவர் பார்த்துள்ளதும் தெரியவந்துள்ளது. இப்படிப்பட்ட கொலை சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது தெலுங்கானாவில்.