Skip to main content

உயிரை பறித்த கண்ணாமூச்சி... ஐஸ் க்ரீம் பெட்டிக்குள் ஒளிந்து கொண்ட சிறுமிகள் உயிரிழப்பு!

Published on 29/04/2022 | Edited on 29/04/2022

 

 incident child who hid inside the ice cream box are

 

கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடும் போது ஐஸ்கிரீம் பெட்டிக்குள் மறைந்து இருந்த 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ளது நஞ்சன்கூடு. அந்த பகுதியில் உள்ள மெசாஸ் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். நாகராஜின் மகள் பாக்கியா மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த காவியா என்ற இரு சிறுமிகளும் சக நண்பர்களுடன் சேர்ந்து கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடி உள்ளனர். அப்பொழுது நாகராஜ் வீட்டுக்கு அருகிலிருந்த ஐஸ் க்ரீம் பெட்டிக்குள் காவியாவும், பாக்யாவும் போய் ஒளிந்து கொண்டுள்ளனர். பல நாட்களாக திறக்கப்படாமல் இருந்த அந்த பெட்டிக்குள் இருவரும் ஒளிந்து கொண்ட நிலையில், உள்ளே மயக்கமுற்ற நிலையில் சிக்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் பாக்யா மற்றும் காவ்யாவை நண்பர்கள் தீவிரமாக தேடியும் கிடைக்காததால் பெற்றோர்களிடம் சொல்லியுள்ளனர். இதனைத்தொடர்ந்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து சிறுமிகளைத் தேடி நிலையில் ஐஸ்கிரீம் பெட்டிக்குள் சிறுமிகள் இருவரும் உயிரிழந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ந்தனர்.

 

உயிரிழந்து கிடந்த சிறுமிகளின் உடல்களை பார்த்து பெற்றோர்களும் உறவினர்களும் கதறி துடித்தனர். சிறுமிகள் உயிரிழந்து கிடந்த ஐஸ்கிரீம் பெட்டியானது வெளியிலிருந்து மட்டுமே திறக்க கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளே சென்ற சிறுமிகள் வெளியே வர கதவைத் திறக்க முடியாமல் மூச்சு முட்டி இறந்து போனதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் சிறுமிகள் இறந்ததும் பெற்றோர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுக்காமல் அவர்களின் உடலை எரித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இந்த சம்பவத்தில் பெற்றோர் மீது எடுக்க வேண்டிய சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.