ADVERTISEMENT

மனித தலையை அடுப்பில் சுட்டு சாப்பிட்ட இளைஞர்!!  ஆந்திராவில் பரபரப்பு!!

11:02 AM Aug 17, 2020 | kalaimohan

ADVERTISEMENT

மனித தலையை அடுப்பில் சுட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

கேள்விப்படும் பொழுதே பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தும் இந்த நிகழ்வு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றுள்ளது. விசாகப்பட்டினத்தில் ராஜு என்ற இளைஞர் பையில் மனித தலை ஒன்றை எடுத்து செல்வதை அப்பகுதியில் உள்ள சுப்பிரமணியம் என்பவர் நோட்டமிட்டு உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இளைஞரான ராஜுவை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அவரது வீட்டிற்கு சென்று பார்க்கையில், பையில் இருந்த மனித தலையை எடுத்து அடுப்பில் சுட்டு, பெண் ஒருவருடன் சாப்பிட முற்பட்டுள்ளார் ராஜு. இதைக்கண்டு அதிர்ந்த சுப்பிரமணியன் போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில் விரைந்த போலீசார், ராஜூவை கைது செய்தனர். ராஜுவுடன் இருந்த அந்த பெண் இடத்தை விட்டு தப்பித்து செல்ல, அந்த பெண் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், ராஜுவின் தந்தை உயிரிழந்த நிலையில் அவரது தாயாரும் அவரை விட்டுச் சென்றுவிட்டார். இப்படிப்பட்ட நிலையில் ராஜூவின் நடவடிக்கைகளில் சில நாட்களாகவே மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அடிக்கடி அவர் மயானத்துக்கு சென்று வருவார். ஆனால் இப்படி மனித தலையை சுட்டு சாப்பிடும் அளவிற்கு என்ன நடந்தது என தெரியவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் கொண்டுவரப்பட்ட தலை மயானத்திலிருந்து எடுத்து எடுத்து வரப்பட்டதா அல்லது கொலை செய்யப்பட்டு தலை எடுத்து வரப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT