ஆனால் மத்தியில் தலைமை பொறுப்பை காங்கிரஸ் கட்சியிடம் வழங்கப்படாது என தெரிவித்துள்ளார். மேலும் மத்தியில் ஆட்சியை வழி நடத்தும் பொறுப்பு மாநில கட்சிகளிடமே இருக்கும் என்பதில் டி.ஆர்.எஸ் கட்சி உறுதியாக இருப்பதாக ரசூல் கான் தெரிவித்துள்ளார். அதே போல் மூன்றாவது அணியின் பிரதமராக யாரை நியமிக்கலாம் என்பது தொடர்பான முழு அதிகாரம் மாநில கட்சிக்களிடையே இருக்கும் எனவும், மாநில கட்சிகளிடையே கருத்து ஒற்றுமை ஏற்பட்டு பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக கட்சி காங்கிரஸில் அங்கம் வகிக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி 180 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றப்படாத நிலையில் திமுக அந்த கூட்டணியில் இருந்தும் பயனிலை எனவும் , மூன்றாவது அணியில் உள்ள மாநில கட்சிகளின் கூட்டணியில் திமுக இணையும் என ரசூல் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.