Skip to main content

மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் நீதிமன்றம் மூலம் தடுப்போம் - முதலமைச்சர் நாராயணசாமி!

Published on 08/10/2019 | Edited on 08/10/2019


புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 21- ஆம் தேதி நடைபெற உள்ளது.இடைத்தேர்தலில்  காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜ் நகர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. நேற்று (07/10/2019) 45 ரோடு சாலையில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை முதலமைச்சர் நாராயணசாமி, கட்சி தலைவர் நமச்சிவாயம், வேட்பாளர் ஜான்குமார் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். அதனை தொடர்ந்து அந்தப் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

 If the dam is built in Megadadu, the court will block - Chief Minister Narayanaswamy!


 

அப்போது செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, “மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்ட சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. அதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். புதுச்சேரி மற்றும் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய அளவு உள்ள நீரை கொடுத்தது போக மீதமுள்ள நீரை தடுத்து நிறுத்த இந்த அணை கட்டப்போவதாக கர்நாடக அரசு தெரிவிக்கிறது. ஆனால் இது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு பாதகமான அமையும். இது குறித்து நீதிமன்றத்தை நாடி அதன் மூலம் தடுத்து நிறுத்துவாம்” என்றார்.

அதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தலைவர் நமச்சிவாயம்  செய்தியாளர்களிடம், “வரும் 17- ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர்க்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.  தொகுதி மக்கள் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றிபெற முனைப்புடன் உள்ளனர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அனைவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளனர்” என  தெரிவித்தார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

 உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
happened to the young man on Treatment to reduce obesity in puducherry

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில், உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் நேற்று முன் தினம் (22-04-24) அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.