கரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தைப் பரிந்துரைத்துள்ளது தேசிய பணிக்குழு.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
உலகம் முழுவதும் 165- க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவிய நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.3 லட்சத்தைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் 14,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உள்ளது. இந்நிலையில் கரோனாவைத் தடுக்க ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தைப் பயன்படுத்தலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய பணிக்குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.சி.எம்.ஆர் இயக்குநர், “கரோனா பாதிக்கபட்டவர்களுக்குசிகிச்சையளிக்கும் சுகாதார ஊழியர்களுக்கு மட்டுமே ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பரிந்துரைக்கப்படுகிறது.நோய்த்தடுப்புக்காகவே இது பரிந்துரைக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.