Skip to main content

இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா ப்ளஸ்; நடைபெறும் ஆய்வு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!

Published on 26/10/2021 | Edited on 26/10/2021

 

union health minister

 

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கரோனா பரவல், கோவாக்சின் தொடர்பாக பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார்.

 

கோவாக்சின் தடுப்பூசி குறித்துப் பேசிய மன்சுக் மாண்டவியா, உலக சுகாதார நிறுவனத்தின் இரண்டாவது குழு இன்று கூடுகிறது. இன்றைய கூட்டத்தின் அடிப்படையில், கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். அதேபோல் குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசியை அனுமதிப்பது தொடர்பான கேள்விக்கு, "பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து கூடுதல் தரவுகள் கேட்கப்பட்டுள்ளது. மதிப்பாய்வு நடந்து கொண்டிருக்கிறது. இணை நோயுள்ள குழந்தைகளுக்கும் இந்த தடுப்பூசியைச் செலுத்தலாம். மேலும் விரிவான பகுப்பாய்வு தேவை" எனத் தெரிவித்துள்ளார்.

 

பிரிட்டனில்  சமீபகாலமாக டெல்டா ப்ளஸ் வகை கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்தநாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 10-ல் ஒருவரை டெல்டா ப்ளஸ் கரோனா தாக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இங்கிலாந்து, இந்த வகை கரோனாவைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

 

இந்த டெல்டா ப்ளஸ் வகை கரோனா, டெல்டா வகை கரோனாவை விட அதிகம் பரவும் தன்மையைக் கொண்டதாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். இந்தச் சூழலில் இந்தியாவின் மஹாராஷ்ட்ராவிலும், மத்தியப் பிரதேசத்திலும் சிலருக்கு கண்டறியப்பட்டுள்ளது. 

 

இந்தநிலையில் இந்த டெல்டா ப்ளஸ் கரோனா பரவல் குறித்த கேள்விக்குப் பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (NCDC) ஆகியவை இந்த திரிபை (டெல்டா ப்ளஸ்) ஆய்வு செய்கின்றன. இதன் தொற்றும் தன்மை மற்றும் பரவல் தன்மை குறித்த எனது கருத்துகள் சரியாக இருக்காது" எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரை எய்ம்ஸ்; எம்பிக்களை எச்சரித்த மத்திய அமைச்சர்; அனல் பறந்த விவாதம்

Published on 11/02/2023 | Edited on 11/02/2023

 

Madurai AIIMS; Union minister warns DMK MPs; A heated debate

 

மதுரை எய்ம்ஸ் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியாவிற்கும் திமுக எம்.பிக்களுக்கும் இடையே மக்களவையில் கடுமையான வாதங்கள் நடந்தது.

 

மக்களவையில் கேள்வி நேரத்தில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு, நாட்டில் எத்தனை மருத்துவமனைகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் துவங்கப்படாத மருத்துவக் கல்லூரிகள் எத்தனை என கேள்விகள் எழுப்பினார்.

 

இதற்கு  பதில் அளித்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, “மதுரை எய்ம்ஸ் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியல் ஆக்குகின்றன. மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் மருத்துவமனை தொடங்கப்பட்டு விட்டது. மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அங்கு உள்கட்டமைப்பு வசதிகள் மட்டும் மேம்படுத்தப்படவில்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இதை அரசியல் ஆக்குகின்றன. மதுரையில் கல்லூரி கட்ட உரிய நேரத்தில் மாநில அரசு நிதி ஒதுக்காததும், நிதியுதவி அளிப்பதாக சொன்ன ஜப்பான் பன்னாட்டு நிதியுதவி நிறுவன பிரதிநிதிகள் கடந்த 2 ஆண்டுகளாக மதுரைக்கு வர முடியவில்லை. இதனால் திட்ட செலவு அதிகரித்துள்ளது. இம்மாதிரியான அனைத்து தகவல்களையும் எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு அளித்துள்ளோம். ஆனால் அதையும் மீறி எதிர்க்கட்சிகள் இதை அரசியல் ஆக்குகின்றனர். 

 

உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமலும், குறைந்த நோயாளிகள் மற்றும் குறைந்த பேராசிரியர்கள் ஆகியோரைக் கொண்டு இயங்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கிறேன். இதனால்தான் என் மீது கோபப்படுகின்றனர் பரவாயில்லை. இதனால் பின்வாங்கி விட மாட்டேன்” எனக் கூறினார்.

 

ஆனாலும் அமைச்சர் பேசத் தொடங்கியதில் இருந்து திமுக எம்.பிக்கள் கடுமையாக எதிர்ப்புக் குரல் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் கோபமடைந்த அமைச்சர், “விடமாட்டேன். யாருக்கு என்ன கடிவாளம் போட முடியுமோ அது போடப்படும்” எனக் கூறினார். இதனைக் கேட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் எங்களை மிரட்டுகின்றார் மன்னிப்பு கேட்க வேண்டுமென சபாநாயகரிடம் வாதிட்டனர். தொடர்ந்து அவையில் இருந்து வெளியேறினர்.

 

 

Next Story

6 முதல் 12 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி

Published on 26/04/2022 | Edited on 26/04/2022

 

Permission granted to covaxin vaccine to 6 to 12 year olds

 

6 முதல் 12 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கான அனுமதியை மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியுள்ளது.  

 

6 முதல் 12 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவில் தொடங்கும் என இந்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், 6 முதல் 12 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கான அனுமதியை மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியுள்ளது.  தற்போது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், விரைவில் 6 முதல் 12 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.