பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் அரசு பேருந்தை ஓட்டிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் மாநகர போக்குவரத்து கழகமான பிஎம்டிசி-யின் இயக்குநராக இருப்பவர் ஷிகா ஐஏஎஸ். கடந்த 2019ம் ஆண்டு மாநகர போக்குவரத்து கழகத்தின் தலைமை பொறுப்பேற்ற இவர், நிர்வாக ரீதியாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

Advertisment
Advertisment

இந்நிலையில், மாநகர போக்குவரத்து கழகத்தில் உள்ள பேருந்துகள் அடிக்கடி பிரேக் பிடிக்காமல் விபத்து ஏற்படுவதாக அவரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்து இருந்தனர். தொடர்ந்து இதுதொடர்பான புகார்கள் எழவே அவரே பேருந்தை இயக்கிசோதனை செய்தார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.